ஏசாயா 8:22 to 9:7 Explanation

ஏசாயா 8:22 to 9:7 விளக்கம்

அவர்கள் (இஸ்ரவேல் ஜனங்கள்) அண்ணாந்துபார்ப்பார்கள், பூமியையும் நோக்கிப்பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளுண்டு அலைவார்கள்.  
 -
ஏசாயா 8 : 22

முன்னுரை:
  • ஏசாயா யூதா ராஜ்யத்தில் வாழ்ந்த ஒரு தீர்க்கத்தரிசி. 
  • யூதா மற்றும் பென்யமீன் கோத்திரங்கள் மாத்திரம் தான் இருந்தன. 
  • வடக்கு ராஜ்யத்திற்கு 10 கோத்திரங்கள் இருந்தன. 
  • கி.மு 722 ல் அசீரிய ராஜ்யம் வடக்கு ராஜ்யமாகிய இஸ்ரவேலுக்குள் புகுந்து அவர்களை அடித்து நொறுக்கி 
  • அந்த தேசத்தையே இல்லாமல் ஆக்கி விட்டது. 
  • அந்த தேசத்தை இல்லாமல் ஆக்கின பொழுது அங்கு அந்நியர்கள் குடியேறினார்கள்.
  • அதற்கு பிறகு அந்நியர்களும், அவிசுவாசிகளும் வாழ்ந்த ஒரு பிரதேசமாக அந்த பிரதேசம் மாறியது. 
வசன விளக்கம்:
  • இஸ்ரவேலர்கள் தங்களுடைய நாட்டை பார்ப்பார்களாம். 
  • அந்த நாடு நாசமாய் போயிருக்குமாம். 
  • அந்தகாரமாய் இருக்குமாம். 
தீர்க்கத்தரிசனம் நிறைவேறியது:
  • இது நடந்தது. 
  • அசீரியர்கள் வந்து தேசத்தை பிடித்த போது அப்படி தான் ஆகியது. 
ஏசாயா தீர்க்கத்தரிசியின் வருகை:
  • இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு ஏசாயா வருகிறார்.
  • அசீரியர்கள் வந்து வடக்கு ராஜ்யத்தை அடித்து 22 வருடங்களுக்கு பிறகு ஏசாயா வருகிறார். 
22 வருடங்கள்- இருள்:
  • 22 வருடங்களாக இஸ்ரவேல் இருளாக அசுத்தமான இடமாக இருந்தது. 
  • விசேஷமாக கலிலேயா கடல் பக்கத்தில் நாசரேத் ,
  • யோர்தான் நதி (கலிலேயா கடல் மேலே தொடங்கி, கீழ் வரை இருக்கும்)
  • அது நல்ல தண்ணீர். உப்பு நீர் அல்ல. 
  • அந்த பிரதேசம் முழுக்க 22 வருஷங்களாக அந்நியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு, 
  • இருளடைந்து, தேவ மகிமை இல்லாமல் அலங்கோலமாய் காணப்பட்டது. 
உலகமெங்கும் சிதறி போகுதல்:
  • அங்கு வாழ்ந்த இஸ்ரவேலர்கள் உலகெங்கும் சிதறிப்போய் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.
  • அப்போது தான் ஏசாயா வந்து தீர்க்கத்தரிசனம் உரைக்கிறார். 
  • அவர்களுக்கு தான் ஏசாயா தீர்க்கத்தரிசனமாக 9வது அதிகாரத்தை சொல்கிறார். 
ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.
 -ஏசாயா 9 : 1

விளக்கம்:
  • ஏசாயா 9:1 ஆகிலும் என தொடங்குகிறது. 
  • என்ன இருந்தாலும், என்ன நடந்தாலும், மாற்றவே முடியாத சூழ்நிலை என்றாலும் நான் நினைத்தால் எதையும் செய்வேன் என்கிறார் கர்த்தர். 
நப்தலி கோத்திரம்:
  • யோசுவாவின் காலத்தில் தேசம் பகுதி பகுதியாக பிரித்து கொடுக்கப்பட்டது அல்லவா?
  • கலிலேயா பக்கத்தில் உள்ள அந்த முழு பிரதேசமும் நப்தலி கோத்திரத்துக்கு கொடுக்கப்பட்டது. 
செபுலோன் கோத்திரம்:
  • கானா ஊர் , நாசரேத் அந்த பிரதேசம் செபுலோன் கோத்திரத்துக்கு கொடுக்கப்பட்டது. 
கலிலேயா பிரதேசம்:
  • எனவே நப்தலி, செபுலோன் கோத்திரம் இருந்த பிரதேசம் கலிலேயா பிரதேசம் என்று அழைக்கப்பட்டது. 
அந்நியர்கள் ஆக்கிரமிப்பு:
  • அந்த பிரதேசம் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது. 
  • ஆனால் அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார் என்று ஏசாயா தீர்க்கத்தரிசனமாக சொன்னார். 
தீர்க்கத்தரிசனம் நிறைவேறியது:
  • ஆண்டவர் அதை செய்தார். 
  • எப்படி செய்தார்? 
  • இயேசுவை என்னவென்று சொல்லுகிறார்கள்?
  • நசரேயனாகிய இயேசு. 
Example- பேதுரு, யோவான்:
  • புதிய ஏற்பாட்டு காலத்திலே தேவாலயத்துக்கு போய் கொண்டு இருக்கும் பொழுது பேதுருவும், யோவானும் ஒரு முடவனைக் காண்கிறார்கள். 
  • அவன் பிச்சை கேட்கிறான். 
  • அப்போது பேதுரு பொன்னும், வெள்ளியும் என்னிடத்தில் இல்லை.
  • நசரேயனாகிய இயேசுவின் நாமத்தில் எழுந்து நட என்று சொன்னார்.
இயேசுவின் நாமம்-மகிமை:
  • சம்பவம் நடந்தது எருசலேமிலே. 
  • நாசரேத் கலிலேயாவில் இருக்கிறது. 
  • இயேசுவை மாத்திரமல்ல, நாசரேத் ஐ யும் மகிமைப்படுத்தினார் பேதுரு. 
  • ஆண்டவர் இன்றைக்கு வரை நாசரேத்தை மகிமைப்படுத்தி கொண்டிருக்கிறார். 
  • இயேசுவின் வருகையோடு அந்த நாசரேத் மகிமைப்பட தொடங்கியது. 
முடிவுரை:
  • இங்கு ஏசாயா தீர்க்கத்தரிசனமாக சொல்லியிருக்கிறார் செபுலோன், நப்தலி இருக்கிற இடங்கள் இப்போது அந்நியர்களிடம் இருக்கிறது.
  • ஆனால் ஒரு நாள் ஆண்டவர் அதை மகிமைப்படுத்துவார். 
  • இஸ்ரவேலர்களுக்கு ஒரு பாலகன் பிறப்பார். 
  • இஸ்ரவேலர்களுக்கு ஒரு குமாரன் கொடுக்கப்படுவார்.
  • அவர் மூலம் அத்தேசம் மகிமைப்படும். 
  • இயேசு கலிலேயாக் கடலில் நடந்தார். 
  • இயேசு மறுரூபமான இடம் தாபோர் மலை. அது கலிலேயாவில் இருக்கிறது. 
  • இப்படி கலிலேயாவை இயேசு மகிமைப்படுத்தினார். 
இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.
 -ஏசாயா 9 : 2
  • கலிலேயாவில் வாழ வேண்டியவர்கள் அந்த நாட்டில் வாழ முடியாமல் அலைந்து திரிகிறபடியினால், நாடில்லாமல் அலைந்து திரிந்தார்கள்.
  • அவர்கள் இருளில் இருந்தார்கள். 
  • இயேசுவானவர் நாட்டை மீட்டு இஸ்ரவேலர்களுக்கு திருப்பி கொடுத்தார். 
  • இயேசுவானவர் தான் அந்த பெரிய வெளிச்சம். 
  • மரண இருளின் தேசம் இஸ்ரவேல். 
அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக் கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்கு முன்பாக மகிழுகிறார்கள்.
 -ஏசாயா 9 : 3
  • இஸ்ரவேலர்களுக்கு சந்தோஷமே இருக்கவில்லை. நாடில்லாமல், வீடில்லாமல் இருந்தார்கள். 
  • இயேசு அவர்களுக்கு நாட்டைக் கொடுத்து, வீட்டைக் கொடுத்து சந்தோஷத்தைக் கொடுத்தார். 
  • தேவன் தான் மகிழ்ச்சியை பெருகப் பண்ணினார். 
மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும், அவர்கள் தோளின்மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர்.
 -ஏசாயா 9 : 4
  • இயேசு இஸ்ரவேலர்களுக்கு வெற்றியை கொடுத்திருக்கிறார். 
இஸ்ரவேல் - சரித்திரம்:
1948 May 14:
  • இஸ்ரவேல் ஒரு தேசமாக மலர்ந்த அன்றே, ஆறு தேசங்கள் இவர்களுக்கு விரோதமாக யுத்தம் செய்ய வந்தது. 
  • அப்போது இராணுவம் இல்லாமல், இராணுவ தளபதி இல்லாமல், பாராளுமன்றம் இல்லாமல், ஆயுதங்கள் இல்லாமல் 
  • இஸ்ரவேலர்கள் அந்த 6 தேசங்களையும் தோல்வியடையச் செய்து 500 சதுர மீட்டர் அதிகமாக பெற்றுக் கொண்டார்கள்.
  • அந்த வெற்றியை கொடுத்தவர் இயேசு. 
1967 June 5:
  • எகிப்து, சீரியா, யோர்தான் என்ற 3 நாடுகளையும், 
  • 6 நாட்களில் அடித்து தோற்கடித்து தோல்வியடையச் செய்தார்கள். 
  • அந்த வெற்றியை கொடுத்தவர் இயேசு. 
1973:
  • நப்தலிக்கு சொந்தமான Golan Heights என்ற பிரதேசத்தை 25 ஏ இராணுவ வீரர்கள் போய் கைப்பற்றினார்களே!
  • அதுவும் பஸ்கா நாளிலே அதை செய்தார்களே! 
  • அந்த வெற்றியை கொடுத்தவர் இயேசு. 
முடிவுரை:
  • அது போல இன்று வரை இஸ்ரவேலர்களுக்கு வெற்றியைக் கொடுத்து கொண்டிருப்பவர் இயேசு. 
  • இஸ்ரவேலர்களுக்கு தேவன்
1)வெளிச்சம்
2)சந்தோஷம்
3)வெற்றி
போன்ற மூன்றையும் கொடுத்து ஆசீர்வதித்தார். 

அமளியாய் யுத்தம்பண்ணுகிற வீரருடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்ட உடுப்பும் அக்கினிக்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும்.
 -ஏசாயா 9 : 5
  • இந்த தீர்க்கத்தரிசனம் மாத்திரம் இன்னும் நிறைவேறக் காத்திருக்கிறது. 
நமக்கு (இஸ்ரவேலர்களுக்கு)
ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
 -ஏசாயா 9 : 6
  • இயேசு வருவதற்கு 700 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஏசாயா, தீர்க்கத்தரிசனமாக இயேசுவை குறித்து சொல்லுகின்ற ஒரு வசனம். 
  • பிறக்கப் போகின்ற குழந்தை.
  • பரலோக பிதாவே மனிதனாக வந்து பிறக்க போகிற அந்த தீர்க்கத்தரிசனத்தை அவர் சொல்கிறார். 
தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
 -ஏசாயா 9 : 7
  • இஸ்ரவேலை மறுபடியும் ஆண்டவர் தூக்கி நிறுத்துவார். 
  • கர்த்தர் தன்னுடைய ஜனங்களை மீட்டு, இஸ்ரவேல் நாட்டையும் மீட்டு, அந்த தேசத்துக்கு சமாதானத்தை அருளுவார். 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4