உன்னதப்பாட்டு ஆறாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 6
உன்னதப்பாட்டு - அதிகாரம் 6 - விளக்கம்
உன் நேசர் எங்கே போனார்? ஸ்திரீகளில் ரூபவதியே! உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்? உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம்.
-உன்னதப்பாட்டு 6 : 1
-உன்னதப்பாட்டு 6 : 1
விளக்கம்:
- யூதர்கள் சபையை பார்த்து சொல்லுகிறார்கள்.
- கிண்டலாக சொல்கிறார்களா? நிஜமாக சொல்கிறார்களா? தெரியாது.
- யூதர்களால் கூட கைவிடப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்ய முடியாது.
- ஆண்டவரைக் கண்டுபிடிக்கக் கூடிய இந்த நாட்களில் அவரைத் தேட வேண்டும்.
தோட்டங்களில் மேயவும், லீலிபுஷ்பங்களைக் கொய்யவும், என் நேசர் தமது தோட்டத்துக்கும் கந்தவர்க்கப்பாத்திகளுக்கும் போனார்.
-உன்னதப்பாட்டு 6 : 2
விளக்கம்:
- கைவிடப்பட்ட சபை, யூதர்களுக்கு பிரதியுத்தரமாக பதிலளிக்கிறது.
- இயேசுவானவரே பள்ளத்தாக்கின் லீலி.
- அவர் பரலோகத்தில் இருந்து பூமி என்னும் பள்ளத்தாக்குக்கு வந்தார்.
- தனது சபையை கூட்டிக் கொண்டு,
- அதனது நிரந்தர தோட்டமாம் பரலோகத்திற்கு போய்விட்டார்.
- பூமியிலுள்ள மனிதர்களையும் லீலியை போல மாற்றினார்.
- இந்த வசனத்தோடு சபை எடுத்துக்கொள்ளப்படுதல், பரலோகம் அனைத்தும் முடிவடைகிறது.
லீலிபுஷ்பங்களைக் கொய்யவும்
- அவற்றை பறித்து அனுபவிக்கவும்
தமது தோட்டத்துக்கும்
- சபைக்கு அடையாளம்
கந்தவர்க்கப்பாத்திகளுக்கும்
- பரலோகத்திற்கு அடையாளம்
- அவர் சபையை எடுத்துக்கொண்டு பரலோகத்திற்கு போய் விட்டார்.
- கைவிடப்பட்ட கிறிஸ்தவர்களாலேயே, இந்த தீர்க்கத்தரிசனம் சொல்லப்பட வைக்கப்படுகின்றது.
நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.
-உன்னதப்பாட்டு 6 : 3விளக்கம்:
- இன்று, இந்த காலத்தில் நடக்கக் கூடிய விஷயங்கள்.
- நிகழ்காலத்தில் நடக்க கூடிய விஷயம்.
- கவிதை என்றால் அப்படி தான், காலம் மாறி மாறி வரும்.
- மணவாட்டி சொல்லுகிறாள்.
நான் என் நேசருடையவள்
- இரட்சிக்கப்பட்ட அனைவருமே இயேசுவினுடையவர்கள்.
- நாம் ஒரு குறிப்பிட்ட சபைக்கு மட்டும் சொந்தக்காரர்கள் அல்ல.
என் நேசர் என்னுடையவர்
- இயேசுவானவர் எல்லா சபைக்கும் சொந்தமானவர்.
- அவர் உங்களுக்கு சொப்பனங்களில், தரிசனங்களில் வராவிட்டாலும் அவர் உங்களுக்கு உரியவர்.
- கிறிஸ்துவை விசுவாசித்து, வசனத்தின்படி இயங்குகிற அனைத்து சபைகளுக்கும் உரியவர் இயேசு.
- இயேசு நமக்கெல்லாம் பொதுவானவர்.
அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்
- இயேசு சபைகளுக்குள் உலாவுகிறார்.
- மேய்கிறார் என்றால் சாப்பிடுகிறார் என்று அர்த்தம்.
- இது உறவை, ஐக்கியத்தைக் காட்டுகிறது.
என் பிரியமே! நீ திர்சாவைப் போல் செளந்தரியமும், எருசலேமைப் போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமானவள்.
-உன்னதப்பாட்டு 6 : 4விளக்கம்:
- மணவாளன் பேசுகிறார்.
- இது ஒரு அழகான வசனம், தீர்க்கத்தரிசனமும் கூட.
- யோசுவா 12 ம் அதிகாரத்தில் பார்த்தால், யோசுவாவின் தலைமையில் பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்துக்குள் நுழைந்த இஸ்ரவேலர்கள் எப்படி ஒவ்வொரு தேசமாக கைப்பற்றினார்கள் என்று நாம் வாசிக்கிறோம்.
- அதில் மொத்தம் 64 தேசங்கள் இருந்தன.
- சிற்றரசர்கள் 33 ; பேரரசர்கள் 31(பலம், அதிகாரம், கலாச்சாரம் பெரியது).
- யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்களும் முதலில் கைப்பற்றினது எரிகோ.
- கடைசி தேசம் திர்சா (யோசுவா 12:9-24)
எரிகோ அமைந்துள்ள இடம்
யாக்கோபின் கிணறு அமைந்துள்ள இடம்- சமாரியா
அந்த இடம் அமைந்திருக்கின்ற பட்டணத்திற்கு இப்போதைய பெயர் Nablus
- அந்த பட்டணத்திற்கு இன்றைய பெயர் Nablus- பாலஸ்தீன A territory பட்டணம்.
- அந்த பட்டணம் வேதத்தில் சீகேம் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் கூட.
- Nablus என்று பாலஸ்தீன அந்த அரபு மொழியில் சொல்லப்பட்டாலும், எபிரேய மொழியில் sheh’him அதாவது சீகேம் என்று தான் எழுதப்பட்டு இருக்கும்.
சீகேம் அமைந்துள்ள இடம்
- சீகேம் என்ற பிரதேசத்தின் வடக்கே, நடந்து போக கூடிய தூரத்தில் இருக்கின்றது தான் திர்சா என்ற இடம்.
- யோசுவாவின் காலத்தில் அது ஒரு தேசமாக இருந்தது.
- பிற்காலத்தில் சாலொமோனுக்கு பிறகு தேசம் இரண்டாக பிரிந்த போது,
- யெரொபெயாம் என்கிற மன்னனை கொண்டு வந்து வடக்கு ராஜ்யத்தின் ராஜாவாக ஏற்படுத்தினார்கள்.
- கி.மு 772 வரை வடக்கு ராஜ்யம்- இஸ்ரவேல் என்ற பெயரில் தான் இருந்து வந்தது.
- அந்த யெரொபெயாம் இந்த திர்சாவில் இருந்து கொண்டு தான் வடக்கு ராஜ்யத்தை ஆட்சி செய்தார்.
- அதற்கு பிறகு நிறைய பேர் அங்கு இருந்து கொண்டு தான் ஆட்சி செய்தார்கள்.
- ஒரு குறிப்பிட்ட மன்னன் வந்து இடத்தை மாற்றும் வரை.
- ரொம்ப தூரத்தில் அல்ல, கொஞ்சம் பக்கத்தில் தான் இடத்தை மாற்றனார்.
யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அவன் திர்சாவிலே ஆறு வருஷம் அரசாண்டு,
-1 இராஜாக்கள் 16 : 23
பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாயிருந்த சேமேருடைய பேரின்படியே சமாரியா என்னும் பேரைச் தரித்தான்.
-1 இராஜாக்கள் 16 : 24
- இந்த உம்ரி வேறு யாரும் அல்ல. ஆகாப் மன்னனின் அப்பா.
- உம்ரி, சமாரியாவுக்கு தலைநகரத்தை மாற்றுவதற்கு முன், திர்சா தான் வடக்கு ராஜ்யத்திற்கு தலைநகரமாக இருந்தது.
- திர்சா என்பதன் அர்த்தம் இனிமை, pleasant, அழகான, சௌந்தர்யமான, அமைதியான.
- அந்த பெயருக்கு ஏற்றாற்போல அமைதியாக அந்த திர்சா காணப்பட்டது.
- அதற்கு பின் உம்ரி அதை தெற்காக கொண்டு வந்து சமாரியவை தலைநகரமாக்கினான்.
- அதற்கு பிறகு சமாரியா தான் கி.மு 722 ல் அசீரியர்கள் வந்து வடக்கு ராஜ்யத்தை பிடித்துக்கொண்டு போகும் வரை, இஸ்ரவேலின் தலைநகரமாக இருந்தது.
- தெற்கு ராஜ்யத்தின் தலைநகரம் எருசலேம்.
- திர்சா, எருசலேம் இரண்டுமே தலைநகரங்கள்.
- ஒன்று பிரிந்து போன யூதர்களின் தலைநகரம்.
- இன்னொன்று இஸ்ரவேலின் நிரந்தர தலைநகரம்.
- யோசுவா காலத்தில் திர்சா ஒரு பெரிய தேசம்.
- ஆனால் சாலொமோன் காலத்தில் திர்சா ஒரு நகரம்.
- இந்த நகரம், பிற்காலத்தில் பெரிய தலைநகரமாக ஆகப் போகிறது என்று சாலொமோனுக்கு தெரியாது.
- ஆனால், அழகாய் இந்த தீர்க்கத்தரிசனத்தை சொல்லியிருக்கிறார்.
- புறஜாதியாருக்கு மத்தியிலே சபை ஒரு தலைநகரம் போல காணப்படுகிறது.
- அதாவது இரட்சிக்கப்பட்டு விசேஷித்தவர்களாய் வந்து விட்டோம்.
- திர்சா எப்படி வடக்கு ராஜ்யத்தின் பிரச்சனைகளுக்கு மத்தியில் அமைதியான நகரமாக இருந்ததோ
- அதே போல சபை பாவிகளும், அந்நியர்களும் , நரகத்திற்கு போய்கொண்டிருக்கிறவர்களாகிய புறஜாதியார் மத்தியிலே அழகாக, அமைதியாக இருக்கிறது.
- புறஜாதிகளின் பாவத்திற்கு மத்தியில் இரட்சிக்கப்பட்ட ஒரு சிறு கூட்டத்தைக் காணும்போது அந்த அமைதியாய் இருக்கிற திர்சாவை போல தெரிகிறது என்கிறார் இயேசு.
- புறஜாதிகள் ஆவிக்குரிய அசிங்கத்தில் காணப்படும் போது, சபை ஆவிக்குரிய சௌந்தர்யத்தில் காணப்படுகிறது.
- எருசலேம் என்பது ஆண்டவர் நேசிக்கும் ஒரு இடம்.
- அந்த எருசலேம் தான் மோரியா மலை.
- மோரியா மலையில் தான் மெல்கிசெதேக்கு வாழ்ந்து வந்தார்.
- அந்த மலையில் தான் ஈசாக்கை பலி கொடுக்க ஆபிரகாம் போகிறார்.
- தாவீது, ஓர்னான் என்னும் மனிதனிடம் அந்த மலையை வாங்கினார்.
- அந்த மலையில் தான் சாலொமோன் தேவாலயம் கட்டுகிறார்.
- ஆண்டவருக்கு எருசலேம் மேல் ஒரு கரிசனை, அக்கறை.
- நித்திய தலைநகரமாக எருசலேமை ஆண்டவர் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.
- சபைக்கு கொடுக்கப்பட்ட ஆவிக்குரிய பெயர் தான் புதிய எருசலேம்.
- வெளி 19 ல் ஆட்டுகுட்டியானவரின் கலியாணம் முடிந்து, புதிய எருசலேமாக மணவாட்டி இறங்குகிறாள் என்று வாசிக்கிறோம்.
- அதனால் தான் இங்கு எருசலேமின் வடிவம் போல நீ காணப்படுகிறாய் என்ற ஆண்டவர் சொல்லுகிறார்.
- இஸ்ரவேலுக்கு மத்தியில் எருசலேம் எவ்வளவு அழகாக இருந்ததோ, அதே போல சபையாகிய நீ புறஜாதியாருக்கு மத்தியில் எருசலேம் வடிவில் இருக்கிறாய் என்று சொல்லுகிறார்.
- வெற்றிக் கொடிகள் பறக்க விட்டு கொண்டிருக்கும் ஒரு படையை போல, சபை வீரமாய், கெம்பீரமாய் வருகிறது என்கிறார்.
- மற்றவர்கள் மத்தியில் நாம் அழகாக, பசுமையாக திர்சாவை போல இருக்க வேண்டும்.
உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது; உன் அளகபாரம் கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது.
-உன்னதப்பாட்டு 6 : 5விளக்கம்:
உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு
- உன் கண்களுக்கு முன்பு நான் தோல்வியடைந்துவிட்டேன்.
- இது ஒரு அன்பின் வெளிப்பாடு.
- (எ.கா) சில நேரம் நீ தான் அழகாய் இருக்கிறாய் என்று சொன்னால், சீ போ பொய் சொல்லாதே என்று சொல்லுவோம் அல்லவா?
- (எ.கா) வரட்டுமா என்று சொல்லிவிட்டு போவோம்.
- அது போல தான் இங்கு காட்டப்படும் எதிர்மறையான சொல் வெளிப்பாடுகள் எல்லாம்.
- ஆச்சர்யத்தோடு ஏற்றுக்கொள்கிறேன் என்று அர்த்தம்.
- அவருடைய ஆசை சபை தன்னை பார்க்க வேண்டும் என்பது.
- இது ஒரு ironic expression.
- மணவாட்டியே! நீ என்னை பார்ப்பதை நான் ரசிக்கிறேன்.
- உன் பார்வையில் நான் மயங்குகிறேன்.
- உன்னுடைய கண்கள் என்னை வென்றது. சபையே நீ என்னை பார்க்கிறாய்.
- ஆண்டவர் இந்த வசனத்தின் மூலமாய் நம்மிடம் என்ன சொல்ல வருகிறார் தெரியுமா?
- இயேசுவைப் பார் என்று.
- Ro’Ke’h in Hebrew - காண்கிறவன் என்று அர்த்தம்.
- Ho’Se’h in Hebrew - பார்க்கிறவன் என்று அர்த்தம்.
- பழைய ஏற்பாட்டில் ஞானதிருஷ்டிக்காரன் அல்லது தீர்க்கத்தரிசிகளை குறிப்பிடுகிற இடத்திலெல்லாம் இந்த சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- அவர்கள் தேவனை காணுகிறவர்கள் என்று அர்த்தம்.
- தேவனை நாம் காண முடியாது.
- ஆனால் தேவனுடைய வல்லமையை, மகத்துவத்தை, தேவனை பல விதங்களில் காண நம்மால் முடியும்.
- இயேசுவை நம்முடைய சரீரக் கண்களால் காண முடியாது.
- ஆனால் வார்த்தையின் மூலமாக சபை, இயேசுவை காண வேண்டும்.
- அநேக கிறிஸ்தவர்கள் அற்புதங்கள், அடையாளங்கள், சுகம், அபிஷேகம், தீர்க்கத்தரிசனம் இவற்றின் பின்னால் ஓடுகின்றார்களே தவிர,
- அவற்றைக் கொடுக்கிற இயேசுவின் பின்னால் போவதை குறைத்து வைத்திருக்கிறார்கள்.
- இவ்வளவு ஆழமாக நீ என்னை பார்க்கின்றாயா?
- உன் கண்கள் என்னை வென்றது என்று இயேசு சொல்லும் அளவிற்கு சபை மணவாளனை பார்க்க வேண்டும்.
- அளகபாரம் என்பது தலைமயிரைக் குறிக்கும்.
- தலைமயிர் பல காரியங்களை குறிக்கும்.
- மணவாட்டியினுடைய தலைமயிர் அதனுடைய அடர்த்தி, கருமை.
- வெள்ளாட்டு மந்தை போல் அடர்த்தியாய் இருக்கிறதாம்.
- வெள்ளாடு ஆபத்தில்லாத அமைதியான விலங்கு
- சபை அப்படி தான் இருக்க வேண்டும்.
உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
-மத்தேயு 10 : 30
ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே. உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.
-1 கொரி 11 : 15
- ஆண்டவர் தன்னுடைய மணவாட்டிக்கு மகிமையென்னும் அளகபாரத்தை கொடுத்திருக்கிறார்.
- சபையே, உங்களை ஆண்டவர் மகிமைப்படுத்தி வைத்திருக்கிறார்.
- எனவே படிப்பு, பட்டம், புகழ், பதவி இவற்றின் மூலம் மகிமையை தேடிப் போக வேண்டிய அவசியம் கிறிஸ்தவர்களுக்கு கிடையாது.
- கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டு மந்தையின் அடர்த்திப் போல சபையின் தலைமயிர் மகிமை பெற்றிருக்கிறதாம்.
- அவரே மகிமையை கொடுத்து, அவரை ரசிக்கிறார்.
- வெள்ளாடு வெள்ளை நிறத்தில் இருக்கும்.
நீதியின் வழியில் உண்டாகும் நரை மயிரானது மகிமையான கிரீடம்.
-நீதிமொழிகள் 16 : 31
- நம்முடைய முதிர்ச்சி, வளர்ச்சி அது கூட ஒரு மகிமையாம்.
- (எ.கா) சிம்சோனுக்கு பலத்தை, மகிமையை தலைமயிரிலே தான் ஆண்டவர் வைத்தார்.
- எனவே, தலைமயிர் என்பது அடையாளரீதியாக பலத்தை, வல்லமையைக் குறிக்கிறது.
- சபை என்பது வல்லமையுள்ள கன்னிகை.
அவன் நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது; அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன்.
-எண்ணாகமம் 6 : 5
- பொருத்தனை பண்ணிக்கொள்பவர்கள், பொருத்தனை காலம் முடியும் வரையும் தலைமயிரை வெட்டக் கூடாது.
- இது பிரதிஷ்டையை காட்டுகிறது.
- மகிமை, வல்லமை மாத்திரம் அல்ல, பிரதிஷ்டையும் கூட.
- நாம் இயேசுவுக்காக பிரதிஷ்டை பண்ணப்பட்டவர்கள்.
- நாம் இயேசுவுக்காக பிரித்தெடுக்கப்பட்ட பரிசுத்தவான்கள்.
அவர்கள் தங்கள் தலைகளைச் சிரையாமலும், தங்கள் மயிரை நீளமாய் வளர்க்காமலும், தங்கள் தலைமயிரைக் கத்தரிக்கக்கடவர்கள்.
-எசேக்கியேல் 44 : 20
- எசேக்கியேல் மூலமாக ஆண்டவர் சொல்லுகிறார், ஆசாரியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று.
- தன் தலைமயிரை நீளமாகவும் அல்லாமல், மொட்டையாகவும் இல்லாமல், சரியான அளவில் வைத்திருக்க வேண்டும் என்ற சொல்லுகிறார்.
- நாம் ஆண்டவருடைய சமூகத்துக்கு ஆசாரியர்களாக போகக் கூடிய அந்தஸ்தையும் காட்டுகிறது.
- சபையே நீ பெலன் உள்ளவள். மகிமை உள்ளவள். பிரதிஷ்டைப் பண்ணப்பட்டவள்.
- அந்த ஆசாரியனாக இருந்து என்னை துதித்து, ஆராதித்து நமஸ்கரிக்கிற ஆசீர்வாதம் பெற்றவள் என்பதை தான் இயேசு சொல்கிறார்.
- அதை தான் இந்த அளகபாரம் காட்டுகிறது.
உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றானாலும் மலடாயிராமல் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது.
-உன்னதப்பாட்டு 6 : 6விளக்கம்:
- மணவாளன் மணவாட்டியை வர்ணிக்கின்ற அழகு.
- கவிதை என்பது பொய்களைக் கொண்டு உண்மைகளை உறுதிப்படுத்துகிறது.
- 4:2 தான் மறுபடியும் இங்கு வருகிறது.
- பற்கள் புன்சிரிப்பை காட்டுகிறது.
- இரட்டைக்குட்டி என்றால் மேல் வரிசை, கீழ் வரிசை பற்கள்.
- பற்கள் எப்போது வெளியே தெரியும்?
- நாம் சிரிக்கும் போது தான்.
- அந்த அழகை தான் இங்கு மணவாளன், மணவாட்டிக்கு காட்டுகிறார்.
- சபை சிரிக்கின்ற, சந்தோஷமான மணவாட்டியாய் இருக்க வேண்டும்.
உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்போலிருக்கிறது.
-உன்னதப்பாட்டு 6 : 7விளக்கம்:
உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள்
- இது 4:3 ல் உள்ள வசனம் தான்.
- ஆனால் அது வேறு. இது வேறு.
- முக்காடு எபிரேய மொழியில் ட்சம்மா என்று வருகிறது.
- இது தலையை மூடுகிற முக்காடு அல்ல, முகத்தை மூடுகிற முகத்திரை.
- லேஸ் மாதிரி கருப்பாய் இருக்கும்.
- அதற்கு ஊடாக கன்னங்கள் தெரியும்.
- அழகாய் இருக்கும்.
- மாதுளம்பழம் என்று சொல்லும் போது அந்த அழகு, அந்த சுவை, அதை சாப்பிடுகிறவருக்கு மாத்திரமே தெரியும்.
- அதன் உரிமையாளருக்கு மாத்திரமே தெரியும்.
- ஆகவே, சபையினுடைய அழகு, மகிமை, மணவாளனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு மாத்திரமே தெரியும்.
- அது வேறு யாருக்கும் போக கூடாது.
- அப்படி போனால் அது ஆவிக்குரிய விபச்சாரம்.
- என்னுடைய மணவாட்டி ஒரு விபச்சாரியை போல தன்னுடைய கன்னங்களை எல்லோருக்கும் காட்டிக் கொண்டு திரிகிறவள் அல்ல.
- அவளுடைய அழகை எனக்கு மாத்திரம் ரசிக்க வைக்கின்றவள் என்று இயேசு சொல்கிறார்.
ராஜஸ்திரீகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியருக்குத் தொகையில்லை.
-உன்னதப்பாட்டு 6 : 8விளக்கம்:
- 60, 80 என்ற இலக்கங்களை வைத்து குழப்பி கொள்ள வேண்டாம்.
- (எ.கா) 4 பேர் பார்த்தா என்ன நினைப்பாங்க.
- அது பேச்சு வழக்கு.
- அது போல தான் இங்கும் சொல்லப்பட்டுள்ளது.
- அநேகம் என்பதனை தான் இது குறிக்கிறது. (கவிதை நடையில்).
- ராஜஸ்திரீகள் என்றால் எத்தனையோ தேசங்கள் உண்டு.
- எத்தனையோ ராஜாக்கள் உண்டு.
- எத்தனையோ இளவரசிமாரும் உண்டு.
- அவர்கள் அழகு எப்படி இருக்கும்?
- விலை உயர்ந்த ஆடை, அணிகலன்கள், வாசனை திரவியங்கள்.
- அப்படிப்பட்ட ராஜஸ்திரீகள் நிறைய இருக்கிறார்கள்.
மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு
- திருட்டுத்தனமாக ஒருவனை கவர வேண்டும் என்றால் அவள் எவ்வளவு அழகாக உடுத்துவாள்.
- அவளுடைய கவர்ச்சி எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்து கொள்ளுங்கள்.
கன்னியருக்குத் தொகையில்லை
- மத்தேயு 5 வது அதிகாரத்தில் வரக் கூடிய அந்த 10 கன்னிப் பெண்கள்.
- இயற்கை அழகு படைத்த கன்னியர்களுக்கு தொகையே இல்லை.
- இது கவிதை.
- இந்த இடத்தில் மணவாளன் என்ன சொல்லுகிறார் என்றால்,
- தன்னுடைய மணவாட்டியாகிய சபை எவ்வளவு அழகு என்று காட்டுவதற்கு இந்த உலகில் இருக்க கூடிய அதி சிறந்த அழகிகள் 3 கூட்டத்தாரைக் காட்டுகிறார்.
- எவ்வளவு அழகிகள் இருந்தாலும், எனக்கென ஒரு மணவாட்டி இருக்கிறாள் என்று மணவாளன் சொல்லுகிறார்.
என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.
-உன்னதப்பாட்டு 6 : 9விளக்கம்:
என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே
- புறா அமைதியான பறவை.
- ஆபத்தில்லாத பறவை.
- சமாதானத்தை குறித்து காட்டும் பறவை.
- இச்சை இல்லாத புறாக் கண்கள்.
- அந்த சபை ஒருத்தி.
- அந்த பண்மைக்குள் ஒருமையை காண்கிறார்.
- எத்தனை வித்தியாசமான கிறிஸ்தவர்கள் இருக்கிறோம்.
- எத்தனை சபை பெயர்களிலே இருக்கிறோம். எத்தனை தேசங்கள், எத்தனை இனம்,
- எத்தனை மொழிகள் பிண்ணனிகள் கொண்ட கிறிஸ்தவர்கள் இருக்கிறோம்.
- ஆனால் 2000 வருடங்களாக இருந்து வரும் கிறிஸ்துவின் சபை ஒருத்தி.
- என்னுடைய மணவாட்டி மற்றவர்கள் பின்னால் அலைகின்றவள் அல்ல.
- அவள் உத்தமி என்கிறார்.
அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்
- ஒரு அம்மா, ஒரே மகளை வைத்திருந்தால் தன் மகளை எப்படியெல்லாம் வளர்ப்பார்.
- ஒரே மகள் இருந்தால் அனைத்து அன்பும் அவளுக்கே வரும்.
- செல்லப்பிள்ளையாக இருப்பாள்.
- அதை கவிதை ரீதியாக குறித்து காட்டுகிறார்.
- ஒரே மகள், பெற்றவளினுடைய பார்வைக்கு எப்படி இருப்பாள்?
- மிக செல்லமாக இருப்பாளல்லவா?
- அதே போல சபையாகிய ஒரே பிள்ளை, இயேசுவுக்கு செல்லப் பிள்ளை.
குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்
- மற்ற பெண்களெல்லாம், நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி என்பார்கள்.
- பிற மதங்களில் இருக்கிற கட்டுப்பாடு கிறிஸ்தவர்களுக்கு இல்லை.
- நாம் சுதந்திரமாக அந்த ஒரே பிள்ளை போன்று இருக்கிறோம்.
- மற்றவர்கள் பொறாமை படும் அளவிற்கு கிறிஸ்தவர்களை நான் வைத்திருக்கிறேன் என்று இயேசு சொல்லுகிறார்.
ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்
- போற்றுதல் என்பது பொறாமையில் பேசுவது.
- நாங்கள் ராஜஸ்திரீகளாக இருந்தும் எங்களை விட அவள் அழகாக இருக்கிறாளே என்ற பொறாமை.
- மறுமனையாட்டிகள் தங்களை அலங்கரித்து கொண்டால் தான் மற்றவர்களை கவர முடியும்.
- ஆனால் இங்கு மணவாளன், மணவாட்டி மேல் கவரப்பட்டு இருக்கிறார்.
சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம் போல் உதிக்கிற இவள் யார்?
-உன்னதப்பாட்டு 6 : 10விளக்கம்:
இவள் யார்?
- இவள் யார்? என்பது Rhetorical Question.
- பதில் தன்னகத்தில் உள்ளடக்கமான ஒரு கேள்வி.
சந்திரனைப்போல் அழகும்
- உலகமே பாவ இருளில் இருக்கும் பொழுது,
- சூரியனின் வெளிச்சத்தை தன்னகத்தே பெற்றுக்கொண்ட
- அந்த சந்திரன் மிளிறுகிறதே அந்த அழகு.
சூரியனைப்போல் பிரகாசமும்
- நீதியின் சூரியனாகிய இயேசுவின் பிரகாசம்.
- உலகத்திற்கு இயேசுவை காண்பிக்க கூடிய ஒன்றே ஒன்று சபை மாத்திரமே.
கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய்
- யுத்தத்திற்கு போய் கொண்டிருக்கிற படை எப்படி கொடிகளோடு, வீரத்தோடு போகும் அந்த மாதிரியான ஒரு வீரம் கொண்டவள்.
- என் சபை கோழை அல்ல. தைரியமான சபை.
- ட வரிசை தமிழின் அழகு.
அருணோதயம் போல் உதிக்கிற இவள் யார்?
- அதிகாலையிலே அந்த சூரியன் மேலே வருவதற்கு முன் உலகிற்கு வெளிச்சம் வருகின்ற அருணோதயத்தை குறிப்பிடுகின்றார்கள்.
- பாவமான இருண்ட உலகத்திற்கு அருணோதயமாய் உதிக்கின்ற இவள் யார்? (சபை)
- அது தான் இதன் அர்த்தம்.
பள்ளத்தாக்கிலே பழுத்த கனிகளைப் பார்க்கவும், திராட்சச்செடிகள் துளிர்விட்டு, மாதளஞ்செடிகள் பூத்ததா என்று அறியவும், வாதுமைத் தோட்டத்துக்குப் போனேன்.
-உன்னதப்பாட்டு 6 : 11விளக்கம்:
வாதுமைத் தோட்டத்துக்குப் போனேன்
- பழைய ஏற்பாட்டிலே வாதுமை, தேவனுடைய பிரசன்னத்தை குறிக்கும்.
- வாதுமை கோல் தான் ஆரோனுடைய கோல்.
- அது துளிர்த்தது.
- வாதுமை பூ வடிவத்திலே தான் Menorah என்று சொல்லுகின்ற அந்த குத்துவிளக்கை உண்டாக்க சொன்னார் ஆண்டவர் மோசேயிடம்.
- வாதுமை நிறைந்த இடம் தான் அந்த லூஸ் என்ற இடம்.
- அந்த இடத்திலே தான் யாக்கோபுக்கு தேவன் தரிசனமாகி Beth’el- தேவனுடைய வீடு என்று பெயர் மாற்றப்பட்டது.
- வாதுமை தேவனுடைய ஒளியைக் காட்டும்.
- தேவனுடைய பிரசன்னத்தைக் காட்டும்.
- ஆகவே, தேவனுடைய பிரசன்னம் இந்த உலகத்தில் சபையிலே இருக்கிறதாம்.
- சபை தான் அந்த வாதுமைத் தோட்டம்.
- வாதுமை தோட்டமாம் சபைக்கு இயேசுவானவர் வருகிறாராம்.
- எதற்கு?
- பள்ளத்தாக்கிலே பழுத்த கனிகளை பார்க்க.
- பள்ளத்தாக்கு என்பது ஒரு நல்ல அர்த்தம் அல்ல.
- பள்ளத்தாக்குகளில் தான் யுத்தங்கள் நடக்கும்.
- ஆனால் பள்ளத்தாக்கின் லீலிகளாய் ஆண்டவர் நம்மை மாற்றி விட்டார்.
- அசுத்தமான, பாவமான உலகத்திலே இருந்தாலும்
- சபை பழுத்த கனிகளை ஆண்டவருக்கு கொடுக்கின்ற ஒரு சபையாய் இருக்க வேண்டும்.
- ஆவியின் கனிகளையும் இங்கு எடுத்து கொள்ளலாம்.
- வாதுமை தோட்டத்துக்கு மணவாளன் வருகிறார் பழுத்த பழங்களை பார்ப்பதற்கு
- திராட்சைசெடிகள் துளிர்விடுவதைப் பார்க்க
நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்.
-யோவான் 15 : 1
- திராட்சைசெடிகள் துளிர்விட்டு கனி தருவதை பார்க்க வருகிறார்.
- மாதுளம் செடி- அந்த கன்னங்கள் எப்படி இயேசுவுக்கு மாத்திரம் கனி தருகின்ற அந்த கன்னங்கள்.
- அதை பார்க்க தோட்டத்துக்கு போனேன்.
நினையாததுக்குமுன்னே என் ஆத்துமா என்னை அம்மினதாபின் இரதங்களுக்கு ஒப்பாக்கிற்று.
-உன்னதப்பாட்டு 6 : 12விளக்கம்:
- நாம் வேதத்தில் காணும் அம்மினதாப் அல்ல.
- சரித்திரத்திலே அம்மினதாப் என்ற போர்வீரன் அவர்கள் மத்தியிலே இருந்தார்.
- அவர்களுடைய இரதம் வேகமாக ஓடும்.
- அதை தான் இங்கு குறிப்பிட்டு காட்டுகிறார்.
- அவ்வளவு வேகமாக என் ஆத்துமா, சபையை நோக்கி என்னைக் கொண்டு போகிறது.
- நமது மணவாளன் நம்மை பார்க்க எப்போதுமே வேகமாய், அவசரமாய் வருகிறார்.
திரும்பிவா, திரும்பிவா, சூலமித்தியே! நாங்கள் உன்னைப் பார்க்கும்படிக்கு, திரும்பிவா, திரும்பிவா. சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்? அவள் இரண்டு சேனையின் கூட்டத்துக்குச் சமானமானவள்.
-உன்னதப்பாட்டு 6 : 13விளக்கம்:
திரும்பிவா, திரும்பிவா, சூலமித்தியே!
- சாலொமோனின் பெண் பால் தான் சூலமித்தி.
- அர்த்தம் - சமாதானத்தை தன்னகத்தே கொண்டிருக்கிறவள்.
- சபையை குறிக்கின்றது.
- சமாதானப் பிரபுவின் மணவாட்டி.
- நாங்கள் என்றால் மணவாளனும், அவருடைய தோழர்களும் (தூதர்கள் அல்லது பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள்).
- வேகமாக சபையை நோக்கி அவர் வருகிறார்.
- என்னுடைய சபையை பார்க்கும் போது உங்களுக்கு என்ன தெரிகிறது என்று ஆண்டவர் கேட்கிறார்.
- சபையை பார்க்கும் போது உங்களுக்கு (உலகத்திற்கு) பிரிவினைகள், போட்டிகள், சண்டை, பொறாமைகள் தெரியலாம்.
- உலகம் சபையை காணும் பொழுது கேவலமான பல விஷயங்களை காணலாம்.
- ஆனால் இயேசு தன்னுடைய சபையை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டார்.
- இயேசுவானவர் உலகத்திற்கு சொல்கிறார்.
- தன்னை திட்டுகிறவர்களை கூட அவர் விட்டுக் கொடுக்க மாட்டார்.
- அவர்கள் கிறிஸ்தவர்கள், சபையாய் இருக்கும் பட்சத்தில் நம்மை எப்போதுமே விட்டுக் கொடுக்க மாட்டார்.
- நமது சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருந்தால், அது இரண்டு சேனைக்கு சமானம்.
Comments
Post a Comment