உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1
உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்
சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.
-உன்னதப்பாட்டு 1 : 1
-உன்னதப்பாட்டு 1 : 1
விளக்கம்:
சாலொமோன் பாடின இந்த புத்தகம், ஒரு தீர்க்கத்தரிசனம் கலந்த கவிதைப் பாடல் என்றே சொல்லலாம்.
————————————————————————-
வசனம் 2-7: சாலொமோனை (மணவாளனாகிய இயேசுவை) பார்த்து, சூலமித்தியாள்(மணவாட்டியாகிய சபை) பாடுகிறாள்.
————————————————————————-
அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது.
-உன்னதப்பாட்டு 1 : 2
-உன்னதப்பாட்டு 1 : 2
விளக்கம்:
அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக
- சபை சொல்கிறது, மணவாளரே! இயேசுவே! உங்களால் எனக்கு கிடைத்த முதல் ஆசீர்வாதம் முத்தம், அதாவது உங்கள் வார்த்தை.
- கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த முதல் ஆசீர்வாதம் தேவனுடைய வார்த்தை தான்.
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
-யோவான் 1 : 1
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
-யோவான் 1 : 14
- வார்த்தையானவர் மாம்சமானதினால் தான் நாம் இப்போது இரட்சிக்கப்பட்டு இருக்கிறோம்.
- அந்த மாம்சமாகிய வார்த்தையானவர் தான் மணவாளன்.
- அந்த மணவாளனுடைய மணவாட்டியாய் நாம் மாறின போது, அந்த மணவாளனுடைய முத்தமாய் நமக்கு கிடைத்தது அவருடைய வார்த்தை.
- அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக என்றால் “அவர் தன் வாயின் வார்த்தைகளால் என்னை ஆசீர்வதிப்பாராக”என்று அர்த்தம்.
உமது நேசம்(அன்பு) திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது.
உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.
-சங்கீதம் 119 : 103
- உம்முடைய வார்த்தைகள் என் செவிக்கு இன்பமாயிருந்தது என்று இல்லையே? ஏன்?
- ஆண்டவருடைய வார்த்தை, சபையாகிய நமது வாய்க்கு வருகிறது.
- அவருடைய வாயிலிருந்து பிறக்கின்ற வார்த்தை நமது வாய்க்கு வருகிறது.
- அவர் நாவின் மூலமாய் வருகின்ற வார்த்தை, என் நாவுக்கு வருகின்றது.
- அவர் வாய்க்கும், என் வாய்க்குமான அந்த முத்தம், தேவனுடைய வார்த்தை உச்சரிப்பை காட்டுகிறது.
- உமது அன்பு மிகப் பெரியது.
அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன்சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.
-எபேசியர் 3 : 3
- புறஜாதியாராகிய நாம், பழைய ஏற்பாடு எனும் இனிமையான வார்த்தைக்கு, அந்த வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறோம். இது தான் அந்த வாயின் முத்தங்களின் அர்த்தம்.
-வெளிப்படுத்தல் 10 : 9
நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அது தேனைப்போல மதுரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.
-வெளிப்படுத்தல் 10 : 10
————————————————————————
உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
-உன்னதப்பாட்டு 1 : 3
விளக்கம்:
ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்
- கன்னியர்கள் என்றால் கிறிஸ்தவர்கள்.
- மணவாட்டி என்றால் கன்னிகை அல்லவா?
- மத்தேயு 25:1-3; பத்து கன்னிகைகள் உவமையில் வருவது பத்து பெண்கள் அல்ல, பத்து கன்னிகைகள்.
- அந்த உவமையில் குறிப்படப்படுகின்ற 10 கன்னிகைகளும் சபை.
- கன்னியர்கள்(சபை) உம்மை நேசிக்கிறது.
கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.
-எபேசியர் 5 : 2
உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்
பரிமளத்தைலம்- இயேசுவின் சிலுவை மரணத்தை குறிக்கிறது. பலியை குறிக்கிறது.
ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை(இயேசுவை) உயர்த்தி,
-பிலிப்பியர் 2 : 9
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
-பிலிப்பியர் 2 : 10
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
-பிலிப்பியர் 2 : 11
- உமது பரிமளதைலங்கள்(உமது பலி) இன்பமான வாசனையுள்ளவைகள் ( எனக்கு ஆசீர்வாதமாய் அமைந்திருக்கிறது).
- நீர் பலியாய் மரித்தபடியினால் இன்று நான் தேவனுடைய பிள்ளையாய் மாறி, பரலோகவாசி ஆகி இருக்கிறேன்.
- ஆவிக்குரிய விபச்சாரியாய் இருந்த நான், உமது நாமத்தின் மூலம், கன்னியாய் மாற்றப்பட்டு இருக்கிறேன்.
- உமது நாமம் (இயேசு என்ற நாமம்)ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது;
- தேவன் இயேசு என்ற நாமத்தில் இந்த உலகத்திற்கு வந்து, அந்த இயேசு என்ற நாமத்தை உடையவராய் மரித்தபடியினால், அந்த இயேசுவின் நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாய் நம்மேல் கொட்டப்பட்டது.
- அதனால் இன்றைக்கு கன்னியர்களாகிய சபை உம்மை நேசிக்கிறது.
என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டு வந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப்பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
-உன்னதப்பாட்டு 1 : 4
-உன்னதப்பாட்டு 1 : 4
விளக்கம்:
என்னை இழுத்துக்கொள்ளும்:
- சபை சொல்லுகிறது இயேசுவானவரைப் பார்த்து, ஆண்டவரே! நான் இன்னும் இன்னும் உம்மண்டையில் நெருங்கி வர வேண்டும்.
- ஒரு மணவாளனுக்கும், மணவாளிக்கும் எவ்வளவு நெருக்கமான உறவு இருக்க முடியுமோ, அவ்வளவு நெருக்கமான உறவு எனக்கு வேண்டும்.
- ஆனால் என்னால் முடியாது. நீர் தான் பெரியவர். எனவே, நீங்கள் என்னை இழுத்துக் கொள்ளுங்கள்.
உமக்குப் பின்னே ஓடிவருவோம்
- யோவான் 6 வது அதிகாரத்தில் இயேசுவின் அற்புதத்தை அனுபவித்தவர்கள்
- இயேசுவனவர் 5அப்பம், 2மீன்களை கொண்டு மக்களை போஷித்த போது அமர்ந்து உண்டவர்கள்,
- இயேசுவின் அற்புதங்களில் திளைத்திருந்தவர்கள்,
- அவருடைய உபதேசத்தை கேட்டு, மனமுடைந்து, இது கடினமான உபதேசம் என்று மக்கள் ஓடுகிறார்கள்.
- அப்பொழுது இயேசுவானவர் தன்னுடைய 12 சீஷர்களையும் பார்த்து கேட்கிறார், நீங்கள் எப்பொழுது போகப் போகிறீர்கள் என்று.
- அப்பொழுது பேதுரு சொல்கிறார், நாங்கள் யாரிடத்தில் போவோம், ஜீவனுள்ள வசனம் உம்மிடத்தில் இருக்கிறதே என்று.
மத்தேயு 5 வது அதிகாரத்தில் இரண்டு விதமான கூட்டங்களை நாம் பார்க்கிறோம்.
விசுவாசிகள் - இயேசுவை தங்களுக்கு பின்னால் அழைத்து கொண்டு போகிறவர்கள்.
சீஷர்கள் - இயேசுவுக்கு பின்னாலே போகிறவர்கள்.
ஆண்டவரே, நாங்கள் விசுவாசிகளாய் இருக்க விரும்பவில்லை; சீஷர்களாய் இருக்க விரும்புகிறோம் என்று சபை இயேசுவைப் பார்த்து சொல்கிறது.
ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டு வந்தார்
- ராஜா- இயேசு (மத்தேயு புத்தகத்தில் இயேசுவை ராஜாவாக காட்டப்பட்டுள்ளது).
- நாம் அவரது கிருபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவரது அறைகளுக்குள்(பரலோகத்தில்) பிரவேசிக்க போகிறோம்.
- நாங்கள் உமது அந்தரங்க அறைக்குள்ளேயே, பிரவேசிக்கும் அளவு, எங்களை நீர் நெருக்கமாக்கி கொண்டீர்.
நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்
- உலகத்தில் எந்த ஒரு மதத்தினருக்கும் இல்லாத, யாருக்கும் கிடைக்காத சந்தோஷம் கிறிஸ்தவர்களாகிய நமக்கு கிடைத்திருக்கிறது.
- துக்கப்பட ஆயிரம் காரணம் இருந்தாலும், நாங்கள் உமக்குள் களிக்கூறுகிறோம்.
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
-பிலிப்பியர் 4 : 4
திராட்சரசத்தைப்பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்
நேசம்- தேவனுடைய அன்பு
உமது அன்பினால் தான் புறஜாதியாராய் இருந்த நாங்கள் இன்றைக்கு இரட்சிக்கப்பட்டு வந்திருக்கிறோம்.
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
-யோவான் 3 : 16
உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்
- இயேசுவே நீங்கள் எங்களை பாவமற கழுவி சுத்திகரித்து உமது நீதியின் வஸ்திரத்தை எங்கள் மேல் போர்த்தி எங்களை உத்தமர்களாக்கி விட்டீர்.
- எனவே, உத்தமர்களாகிய நாங்கள் உங்களை நேசிக்கிறோம்.
எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன்.
-உன்னதப்பாட்டு 1 : 5
-உன்னதப்பாட்டு 1 : 5
விளக்கம்:
சபை யூதர்களுக்கு சொன்னது
எருசலேமின் குமாரத்திகளே
எருசலேமின் குமாரத்திகள்- யூதர்கள்
யூதர்களுக்கு புறஜாதியாராகிய நம்மை குறித்து ஒரு உணர்வு இருக்கிறது. நாங்கள் என்ன தான் இருந்தாலும் யூதர்கள், இவர்கள் புறஜாதி என்ற உணர்வு அவர்களிடம் இருக்கிறது.
கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும்
இது ஒரு வர்ணனை; (எ.கா) வானம் போன்ற நீலம்
நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன்
- சபை யூதர்களை பார்த்து, நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன் என்று சொல்கிறது.
- நான் புறஜாதி தான், ஆனாலும் ஆண்டவருடன் அழகாய் இருக்கிறேன் என்று சபை சொல்கிறது.
- அசிங்கமாய் இருந்த எங்களை ஆண்டவர் அழகாக்கி விட்டார்.
- இதை தீர்க்கத்தரிசனமாக இந்த வசனம் சொல்லுகிறது.
———————————————————————-—-
நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்; வெய்யில் என்மேற்பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.
-உன்னதப்பாட்டு 1 : 6
-உன்னதப்பாட்டு 1 : 6
விளக்கம்:
சபை யூதர்களுக்கு சொன்னது
நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்
- யூதர்களே! ஆபிரகாமின் உண்மையான சந்ததியே!
- நான் புறஜாதியான் என்று பார்க்காதேயுங்கள். அந்நியன் என்றும் பார்க்காதேயுங்கள்.
வெய்யில் என்மேற்பட்டது
அது ஏன் அப்படி நடந்தது என்றால் வெயில் என் மேல் பட்டது. முன்பு நான் வாழ்ந்தது பாலைவனத்தில், அதாவது வெயிலிலே வாழ்ந்தேன்.
என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்
- திராட்சைத்தோட்டத்துக்கு காவற்காரர்கள் எங்கே இருப்பார்கள். வெயிலில் கருகி கொண்டல்லவா இருப்பார்கள்.
- அப்படியே, புறஜாதியாராகிய நாமும், ஆண்டவர் இல்லாமல் வெயிலில் கருகிக் கொண்டிருந்தோம்.
என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை
- பரம்பரை கிறிஸ்தவர்கள் என்று ஒருவரும் கிடையாது. அப்படிசொன்னால் கூட, 16ம் நூற்றாண்டு வரை தான் செல்ல முடியும்.
- உங்களுடைய மூதாதையர்களும் வேற்று மதத்தில் தான் இருந்தார்கள்.
- காலம் காலமாக நாம் யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, வேதத்தை அறிந்தவர்களாகவோ இருக்கவில்லை.
- வெயிலிலே அலைந்து, திரிந்து,கருகி, கறுப்பிலே தான் இருந்தோம்.
- அதை தான் தீர்க்கத்தரிசனமாக இந்த வசனம் சொல்லுகிறது.
————————————————————————-
என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்து திரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன?
-உன்னதப்பாட்டு 1 : 7
-உன்னதப்பாட்டு 1 : 7
விளக்கம்:
சபை மணவாளனிடம் சொல்கிறது
என் ஆத்தும நேசரே
இயேசுவே!
உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்
உமது மந்தை- இஸ்ரவேலர்கள்
- மத்தியானத்தில் தான் அந்த வெப்பம் கஷ்டமாக இருக்கும்.
- எனவே, வெயில் நேரத்தில் அவைகளை எப்படி பாதுகாக்கின்றீர்?
- ஆண்டவரே, இஸ்ரவேலர்களாகிய உமது மந்தையை நீர் காலா காலமாக பாதுகாத்து கொண்டு தான் வருகிறீர்.
- அவர்களை அழிப்பதற்கு எத்தனையோ சக்திகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.
- இஸ்ரவேலரை அழிக்க எத்தனையோ சாம்பிராஜ்யங்கள், எத்தனையோ மாமன்னர்கள், தனிநபர்கள், பயங்கரவாத குழுக்கள் முயற்சி செய்கின்றன.
- ஆனால் ஏதோ ஒரு விதத்தில் அவர்களுக்கு அபரிமிதமான பாதுகாப்பு கொடுத்து கொண்டு வருகிறீரே.
- உமது சொந்த மந்தைகளை நீர் மேய்க்கிறீரே. அதிலே ஏதோ இரகசியம் இருக்கிறது.
- ஆபத்தான, சூடு அதிகமான நேரத்தில் கூட நீர் அவர்களை எங்கேயோ மடக்குகிறீர். அதை எனக்கு சொல்லும் என் ஆண்டவரே,
- ஏனெனில் எனக்கும் அப்படி ஒரு பாதுகாப்பு கிடைத்தால் நல்லது அதை நான் ஆசைப்படுகிறேன்.
உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்து திரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன
- அவர்கள் அவ்வளவு ஆசீர்வாதமாய் இருக்கிறார்கள். பாதுகாப்பாய் இருக்கிறார்கள்.
- அப்படி இருக்கும் பொழுது நான் ஏன் அந்த ஆசீர்வாதம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று சபை ஆண்டவரிடம் கேட்கிறது.
- இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் சபை எப்பொழுதும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு காரியம் இருக்கிறது.
- ஆம். நாம் தேவனுடைய கிருபைக்குள் வந்திருக்கிறோம்.
- ஆனால் ஆண்டவர் இஸ்ரவேலரை கைவிடவில்லை, கைவிடவும் மாட்டார்.
- அந்த உண்மையான மந்தையை கைவிட்டுவிட்டு நம்மை எடுத்துக்கொள்ளவில்லை.
- அவர்களை விசேஷமாய் அவர் பாதுகாத்து கொண்டுதான் இருக்கிறார்.
————————————————————————-
வசனம் 8-11: சூலமித்தியாள்(மணவாட்டியாகிய சபை) ஐ பார்த்து சாலொமோன் (மணவாளனாகிய இயேசு) பாடுகிறார்.
————————————————————————
ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.
-உன்னதப்பாட்டு 1 : 8
-உன்னதப்பாட்டு 1 : 8
விளக்கம்:
ஸ்திரீகளில் ரூபவதியே
- முதல் தடவையாக மணவாளன், மணவாட்டியோடு பேசுகிறார். சபையை பார்த்து ஸ்திரீகளில் ரூபவதியே! என்று மணவாளன் சொல்கிறார்.
- எத்தனையோ மக்கள் இருக்கிறார்கள், ஆனால் கிறிஸ்துவை ஏற்றுகொண்டவர்களை நான் மிகவும் அழகுள்ளவளாக பார்க்கிறேன் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.
அதை நீ அறியாயாகில்
நான் எப்படி என்னுடைய மந்தைகளை மேய்க்கிறேன் என்று நீ அறியாயாகில்
மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு
மேய்ப்பன்-Pastor
போதகர் அல்ல, போதகர் என்றால் Teacher
- கிறிஸ்தவர்களாகிய அனைவருக்கும் ஒரு மேய்ப்பன் தேவை.
- மக்களாகிய நாம் அனைவருமே ஆடுகள் தான்.
- எனவே நம்மை நடத்துகின்ற மேய்ப்பன் வேண்டும்.
- நமது நல்ல மேய்ப்பனாகிய மணவாளன், மணவாட்டியாகிய நம்மிடம் சொல்கிறார், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை(even to senior pastors) மேயவிடு .
- ஒரு ஆவிக்குரிய சபையை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.
- ஒரு ஆவிக்குரிய தகப்பன் உங்களுக்கு வேண்டும்.
————————————————————————
என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள் பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன்.
-உன்னதப்பாட்டு 1 : 9
-உன்னதப்பாட்டு 1 : 9
விளக்கம்:
என் பிரியமே
மணவாளன் நம்மை பார்த்து சொல்கிறார்.
பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள் பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன்
பரி என்றால் குதிரை
பவுஞ்சு என்றால் பெண் குதிரை
- பார்வோன்கள் தங்கள் இரதங்களை இழுக்க குதிரைகளை எப்படி தெரிவு செய்வார்கள் என்றால் அது உயர்ரக குதிரைகளாய் இருக்க வேண்டும்.
- பார்வோன்கள் சாதாரணமாக பவனி வருவதற்கு தங்கள் இரதங்களை இழுக்க பெண் குதிரைகளை தான் பயன்படுத்துவார்கள்.
- யுத்தங்களுக்கு செல்லும் போது, யுத்த குதிரைகளாய் ஆண் குதிரைகளை தான் பயன்படுத்துவார்கள்.
- ராஜா பவனி வருகிற அந்த இரதங்களின் பெண் குதிரையே நீ தான் என்கிறார் இயேசு.
- ராஜாவாகிய நான் எல்லா இடமும் போகிறது, சபையே உன் மூலமாய் தான்.
- நீ தான் என்னை சுமந்து கொண்டு போக வேண்டும்.
- சபையே! பூமியில்நான் போக விரும்பும் இடங்களுக்கெல்லாம் என்னை கொண்டு செல்ல வேண்டியது சபையாகிய நீயே என்று மணவாளன் சொல்கிறார்.
- நான் போக விரும்பும் சுவிசேஷம் இல்லாத இடங்களுக்கு எல்லாம் நீ தான் போக வேண்டும்.
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
-மத்தேயு 28 : 19
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
-மத்தேயு 28 : 20
இதையெல்லாம் சபை உருவாவதற்கு 1000 வருடங்களுக்கு முன்னமே சாலொமோன் மூலமாக தீர்க்கத்தரிசனமாக உரைத்துள்ளார்.
————————————————————————-
ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது.
-உன்னதப்பாட்டு 1 : 10
-உன்னதப்பாட்டு 1 : 10
விளக்கம்:
- இது இஸ்ரவேல் ராஜா, இஸ்ரவேல் ராணிகளைப் பற்றி பேசுகிறார்.
- வேறு ராணிகளை நாம் கற்பனை செய்யக் கூடாது.
- காதை சுற்றிலும் ஒரு தங்க சங்கிலி, அது அப்படியே கன்னங்களின் வழியாய் வந்து முடியும் ஒரு ஆபரணம்.
- பிறகு கழுத்தில் அணியும் ஆபரணங்கள்.
- இதில் ஆழமான ஆவிக்குரிய இரகசியங்கள் எதுவும் இல்லை.
- அழகை தான் வர்ணிக்கிறார்.
————————————————————————
வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம்.
-உன்னதப்பாட்டு 1 : 11
-உன்னதப்பாட்டு 1 : 11
விளக்கம்:
யூத இஸ்ரேலிய மணமகள் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று மணவாளன் ரசிக்கின்றதை காட்டுகிறது.
- இது நெற்றிப் பொட்டு சம்பந்தப்பட்டது அல்ல.
- அது ஒரு காது ஆபரணம்.
- காதுக்குள்ளே பொட்டு பொட்டாய் இருக்கின்ற ஒரு ஆபரணம்.
- இந்த நகை ஒரு ஆவிக்குரிய அடையாளத்தையும் காட்டுகிறது.
உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி.
-சங்கீதம் 119 : 111
உம்முடைய சாட்சி- (Be-heath in Hebrew) தேவனுடைய வார்த்தை
- இது உண்மையான ஆபரணத்தை குறிப்பது மாத்திரமல்ல.
- காதுகள் தேவனுடைய வார்த்தையை கேட்க தீவிரிக்கின்றது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது.
- தேவனுடைய வார்த்தையை ஆசையாய், ஆழமாய் வாசிக்கிறவர்களின் காதுகள் அலங்கரிக்கப்பட்ட காதுகளாக இருக்கும் என்று இந்த இடத்தில் பார்க்கிறோம்.
————————————————————————-
வசனம் 12-14: மணவாட்டி மணவாளனுக்கு பாடுவது.
வசனம் 12-14: மணவாட்டி மணவாளனுக்கு பாடுவது.
————————————————————————-
ராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளததைலம் தன் வாசனையை வீசும்.
-உன்னதப்பாட்டு 1 : 12
-உன்னதப்பாட்டு 1 : 12
ராஜா
இயேசு
தமது பந்தியிலிருக்குந்தனையும்
இதோ, வாசற்படியிலே (லவோதிக்கேயா சபை வாசல்) நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
-வெளிப்படுத்தல் 3 : 20
- யூதர்கள் கலாச்சாரத்தில், ஒருவரோடு போஜனம் பண்ணுவது என்பது, ஒரு மிக உயர்ந்த உறவு .
- ஒருவர் வீட்டிற்கு வந்தால் அவர்களை நாங்கள் மதிக்கிறோம்; ஏற்றுக் கொண்டோம் என்று காண்பிக்க உணவு அருந்த சொல்வார்கள்.
- அதே போல வந்தவர்களும் , நாங்களும் உங்களை ஏற்றுக்கொண்டோம் என்று காண்பிக்க உணவு அருந்தி விட்டு செல்வார்கள்.
- என் வீட்டு சாப்பாட்டை நான் உனக்கு கொடுக்கும் அளவும் நீ எனக்கு முக்கியமானவன் என்றும்;
- அதே போல உன் வீட்டில் சாப்பிடுகிற அளவு நான் உன்னை மதிக்கிறேன் என்று அர்த்தமாம்.
- இயேசுவும் போஜனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறவர்.
- தனது பிரசங்கத்தை கேட்க வந்தவர்களுக்கு கூட, 5அப்பம் 2 மீன்களை கொண்டு போஷித்தார்.
- தனது கடைசி இரவின் போது கூட சீஷர்களுடன் போஜனம் பண்ணினார்.
- எனக்கும் என் மணவாளனுக்கும் இருக்கும் உறவு, ஐக்கியம் உயர் நிலையான ஐக்கியம்.
- நானும் அவரும் சேர்ந்து போஜனம் பண்ணும் உறவு எங்களிடத்தில் உள்ளது என்று மணவாட்டி, மணவாளனை பார்த்து சொல்கிறாள்.
என்னுடைய நளததைலம் தன் வாசனையை வீசும்
- இது இஸ்ரவேலிலே உருவாக்கப்படுகின்ற ஒரு தைலமே அல்ல.
- அந்த காலத்திலே இது இந்தியாவில் இருக்க கூடிய மிக வாசனையான தைலம்.
- சாலொமோன் ராஜாவின் காலத்தில் தான் இந்த நளதைலம் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டது.
அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.
-யோவான் 12 : 3
அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.
-யோவான் 12 : 7
- இந்த தைலம் தான் உன்னதப்பாட்டில் வருகிற அந்த தைலம்.
- சபை சொல்கிறது ராஜாவாகிய இயேசு என்னோடு பந்தியிருப்பார்.
- நானும் அவரோடு பந்தியிருப்பேன்.
- அந்த நேரத்தில் நான் அவருடைய மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் எப்பொழுதும் நினைப்பேன்.
- ஏனென்றால், அவர் வந்து எனக்காக மரித்ததினால் தான், எனக்கு இன்றைக்கு அவரோடு கூட உறவாடுகின்ற கிருபை கிடைத்திருக்கிறது.
- சபையாகிய நாம் இயேசுவோடு ஐக்கியமாக இருக்க வேண்டும்.
- அவரோடு போஜனம் பண்ண வேண்டும்.
- அவருடைய வார்த்தையாகிய மன்னாவை எப்பொழுதும் புசிக்க வேண்டும்.
- இராப்போஜனம் என்று சொல்கின்ற திருவிருந்திலே கலந்து கொண்டு அவர் வரும் வரை மரணத்தை நினைவில் கொள்ள வேண்டும்.
- அந்த போஜனத்தின் ஐக்கியத்தின் நடுவில், அவருடைய மரணம், உயிர்த்தெழுதலை நினைத்து வாசனை வீசுகின்ற சபையாக நாம் இருக்க வேண்டும்.
- அவர்கள் விலையேறப்பெற்ற அந்த நளதைலத்தை நிறைய செலவழித்து இறக்குமதி செய்தது போல, நாமும் கஞ்சத்தனம் இல்லாமல் நம் நேரத்தை அவருக்கு கொடுக்க வேண்டும்.
என் நேசர் எனக்கு என் ஸ்தனங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.
-உன்னதப்பாட்டு 1 : 13
-உன்னதப்பாட்டு 1 : 13
விளக்கம்:
வெள்ளைப்போளச் செண்டு
- வெள்ளைப்போளம்- Mo-hh in Hebrew
- அது பிற்காலத்திலே Me-hh என்று ஆனது.
- சிமிர்னா- seh-mehh-nah - வெள்ளைப்போளத்தை உண்டாக்குகின்ற நகரம் அது.
தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது.
-சங்கீதம் 45 : 8
- நளதைலம் என்பது முழு வீட்டையும் நறுமணமாக்குகிறது போல, வெள்ளைப்போளம் ராஜாவையே நறுமணமாக்குகிறது.
- அதாவது இயேசுவையே நறுமணமாக்குகிறது.
என் நேசர் எனக்கு என் ஸ்தனங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு
- என் ஸ்தனங்கள்- மார்பகங்கள்.
- பெண்ணின் மார்பு காமம் அல்ல.
- அது இரத்தத்தை பாலாக்கி கொடுக்கிற ஒரு ஜீவனுள்ள உறுப்பு.
- யூதப் பெண்கள் வெள்ளைப்போளத்தை கழுத்தில் அணியக்கூடிய மாலையின் குப்பியிலே தொங்க விடுவார்கள்.
- யூதப்பெண்கள் தங்கள் நெஞ்சுப் பகுதியை வாசமாய் வைத்திருப்பதற்காக இதை உபயோகிப்பார்கள்.
- அதற்குரிய ஆவிக்குரிய அர்த்தம் என்னவென்றால் என் இருதயத்தில் துர்நாற்றம் கிடையாது.
- என் இருதயத்தில் அசிங்கம் கிடையாது.
- என் இருதயம் வாசனை வீசுகின்றது.
- சபையாகிய நாம் இயேசு என்ற ராஜாவை இருதயத்திற்கு அருகாமையில் வைத்துக் கொண்டிருக்கிறோம்.
- எனவே, எங்கள் நிமித்தமாக ராஜா நறுமணம் வீசுகின்ற வெள்ளைப்போள வாசனையுள்ள மன்னனாக வலம்வருவார்.
- நம் இருதயத்தில் மற்ற விஷயங்கள் இருந்தால், இயேசுவானவருக்கு இடம் இருக்காது.
- எனவே, அதையெல்லாம் நினைக்காமல் அவருடைய வார்த்தைக்கு இருதயத்தில் இடம் கொடுப்போம்.
————————————————————————-
என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்து.
-உன்னதப்பாட்டு 1 : 14
-உன்னதப்பாட்டு 1 : 14
விளக்கம்:
எங்கேதி ஊர்
தாவீது அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, என்கேதியிலுள்ள அரணிப்பான இடங்களில் தங்கினான்.
-1 சாமுவேல் 23 : 29
சவுல் பெலிஸ்தரைப் பின்தொடர்ந்து திரும்பி வந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்தரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
-1 சாமுவேல் 24 : 1
- சவக்கடலை அண்டிய அந்த பிரதேசங்களில் எங்கேதி அமைந்துள்ளது.
- அது முழுக்க வறண்ட பாலை நிலம்.
- ஆனால் உள்ளே செல்ல செல்ல அழகான நீர்வீழ்ச்சிகள் இருக்கும்.
- அந்த எங்கேதியில் மட்டும் இருக்கின்ற சில தாவரங்கள் இருக்கின்றன.
- அங்கு திராட்சைத்தோட்டங்களும் இருக்கிறது.
மருதோன்றிப் (மருதாணி) பூங்கொத்து
- அந்த தாவரம் அல்ல இந்த தாவரம்.
- அதன் உண்மையான பெயர்
- Ko-phe-h in Hebrew
- Lawsonia Aiba - Botanical name
- இந்த தாவரத்திற்கு இரண்டு தன்மை உண்டு. மையும், நறுமணமும்
- கண் புருவங்களுக்கு மேலே, கன்னங்களிலே, தாடையிலே, கழுத்திலே, கைகளிலே, இடுப்பிலே இந்த தாவரத்தின் மையை வைத்து பெண்கள்அலங்கரித்து கொள்வார்கள்.
- இது அலங்காரப் பொருள் மாத்திரமல்ல வாசனைப்பொருளும் கூட.
- என் இயேசு எனக்கு அலங்காரமாயும், வாசனை வீசுகின்றவராயும் இருக்கிறார்.
- அவர் என்னை அந்த தாவரத்தை போல நறுமணம் ஆக்குகிறார். நான் அவரை நறுமணமாக்குகிறேன்.
————————————————————————
என் பிரியமே! நீ ரூபவதி; நீ ருபவதி; உன் கண்கள் புறாக்கண்கள்.
-உன்னதப்பாட்டு 1 : 15
-உன்னதப்பாட்டு 1 : 15
விளக்கம்:
நீ ரூபவதி; நீ ருபவதி
- ஏன் இரண்டு தடவை? இது ஒரு பாடல்.
- பாடலிலே சில விஷயங்கள் இரண்டு தடவை வருவது அந்த ராகத்திற்கு ஏற்ப அமைப்பதற்கு.
- அதுமட்டுமன்றி, அந்த விஷயத்தை மேலதிகமாய் உறுதிப்படுத்துவதற்காகவும் சொல்லப்படுகிறது.
- இயேசு, மெய்யாகவே, மெய்யாகவே என்று இருமுறை உபயோகிப்பது போல, இங்கும் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்த ரூபவதி என்று இருமுறை வருகிறது.
- ரூபவதி என்றால் அழகானவள்
- புறா-சமாதானம், கபடற்றத்தன்மை, பரிசுத்தம் என்பதைக் குறிக்கிறது.
- கோபத்தை வெளிக்காட்டக்கூடிய இடம் கண்கள். கண்களிலே தான் இச்சை அதிகம்.
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
-மத்தேயு 18 : 9
- இங்கு சபையை பார்த்து இயேசுவானவர் சொல்கிறார், உன் கண்கள் புறாக்கண்கள்- சமாதானம், பரிசுத்தம், ஐக்கியம், பொறுமை, அழகு கொண்டது.
- உன் கண்களில் நான் கோபத்தை காணவில்லை, பரிசுத்தத்தை காண்கிறேன்.
- உன் கண்களில் நான் இச்சையை காணவில்லை, பரிசுத்தத்தை காண்கிறேன்.
- உன் கண்களில் நான் சண்டையை காணவில்லை, ஐக்கியத்தை காண்கிறேன்.
- புறா யாரையும் தாக்காது, துரத்தாது.
- புறா என்பது மிக அகிம்சையான பறவை.
சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
-மத்தேயு 5 : 9
கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.
-ரோமர் 12 : 18
சமாதானப்பிரவுவின் மணவாட்டியாகிய நாம் எவ்வளவு சமாதானமாக இருக்க வேண்டும்.
————————————————————————-
நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்; நம்முடைய மஞ்சம் பசுமையானது.
-உன்னதப்பாட்டு 1 : 16
-உன்னதப்பாட்டு 1 : 16
விளக்கம்:
நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்
- இது மணவாட்டி மணவாளனை பார்த்து பாடுகிறாள்.
- ஆண்டவருக்கு நிகரான ஒரு உருவத்தை நாம் காட்ட முடியாது.
- ஏனென்றால் அவர் அவ்வளவு அழகுள்ளவர்.
- அவரை யாரும் கண்டதில்லை.
- அந்த அழகை நாம் பரலோகத்துக்கு போன பிறகு தான் காணப் போகிறோம்.
- இயேசுவானவர் வருவதற்கு சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பே, அவருடைய சிலுவை மரணத்தை குறித்து தீர்க்கத்தரிசனமாய் ஒரு உபத்திரவப்படுகின்ற ஊழியக்காரனின் காட்சியை மையமாய் வைத்து ஏசாயா தீர்க்கத்தரிசனமாய் சொல்லியிருக்கிறார்.
இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
-ஏசாயா 53 : 2
- சௌந்தர்யத்தில் நிறைந்த நம் தேவன், நமக்காக அசிங்கமானார்.
- அசிங்கமாய் மரித்தார்
- அழகாய் உயிர்த்தார்.
- அந்த கிருபையின் மூலம், அருவருப்பும், அசிங்கமும் கொண்ட நாம், அழகாய் இருக்கிறோம்.
எல்லா மனுபுத்திரரிலும் நீர் மகா சவுந்தரியமுள்ளவர்; உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்.
-சங்கீதம் 45 : 2
நம்முடைய மஞ்சம்.
மஞ்சம்-படுக்கை ; அதாவது ஓய்வாய் இருக்கின்ற இடம்,
இளைப்பாறுகின்ற இடம் மஞ்சம்.
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
-மத்தேயு 11 : 28
பசுமையானது
பசுமை- பாலைவனச் சோலையில் உள்ள பசுமை.
சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.
-ஏசாயா 41 : 17
உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்ட பூமியை நீர்க்கேணிகளுமாக்கி,
-ஏசாயா 41 : 18
வனாந்தரத்திலே கேதுருமரங்களையும், சீத்தீம்மரங்களையும், மிருதுச்செடிகளையும், ஒலிவமரங்களையும் நட்டு, அவாந்தரவெளியிலே தேவதாருவிருட்சங்களையும், பாய்மரவிருட்சங்களையும், புன்னைமரங்களையும் உண்டுபண்ணுவேன்.
-ஏசாயா 41 : 19
ஆண்டவர், சபையாகிய நமக்கு கொடுக்கிற அந்த இளைப்பாறுதல், பசுமையான பாலைவனச் சோலை இளைப்பாறுதல்.
————————————————————————-
நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுருமரம், நம்முடைய மச்சு தேவதாருமரம்.
-உன்னதப்பாட்டு 1 : 17
-உன்னதப்பாட்டு 1 : 17
விளக்கம்:
நித்திய ஜீவனை குறிக்கிறது.
நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக்கேட்டேன்.
-வெளிப்படுத்தல் 19 : 7
நம்முடைய வீட்டின் உத்திரங்கள் (Flat ceiling -விட்டம்) கேதுருமரம்
- கேதுரு- லீபனோனின் கேதுரு ராஜரீகத்தை, பலத்தை, உறுதியை குறிக்கும்.
- கேதுரு மரத்தை கொண்டு தான் சாலொமோன் தேவாலயத்தை கட்டினார்.
- நம்முடைய நித்திய ஜீவன் தேவனுடைய ராஜ அரண்மனையிலே இருக்கிறது.
- அதற்கான சாயல் நம் வாழுகின்ற பூமியின் சபையில் இருக்கிறது.
தேவனுடைய வனத்திலுள்ள கேதுருக்கள் அதை மறைக்கக்கூடாதிருந்தது; தேவதாரு விருட்சங்கள் அதின் கொப்புகளுக்குச் சமானமல்ல; அர்மோன் மரங்கள் அதின் கிளைகளுக்கு நிகரல்ல; தேவனுடைய வனத்திலுள்ள ஒரு விருட்சமும் அலங்காரத்திலே அதற்கு ஒப்பல்ல.
-எசேக்கியேல் 31 : 8
கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.
-சங்கீதம் 92 : 13
ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,
-எபேசியர் 2 : 19
உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
-1 கொரி 6 : 19
நம்முடைய மச்சு (மேற்கூரை உட்புறம்) தேவதாருமரம்.
தேவதாரு மரம்- Turpentine
இது ஒரு வாசனைப் பொருள் மற்றும் பூச்சிக்கொல்லி
முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும்; காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்.
-ஏசாயா 55 : 13
நாம் இப்பொழுதே தேவனுடைய வீட்டை சேர்ந்தவர்கள். இப்பொழுதே நாம் நித்திய ஜீவ வாசிகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
————————————————————————
Thank you Sister
ReplyDelete