தீர்க்கத்தரிசிகளின் பெயர்களும், அந்த பெயர்களின் பொருளும், விளக்கமும்
தீர்க்கத்தரிசிகளின் பெயர்களும், அந்த பெயர்களின் பொருளும், விளக்கமும்
பெரிய தீர்க்கத்தரிசிகளின் பெயர்களும், அதன் பெயர் அர்த்தமும்
1) ஏசாயா - கர்த்தருடைய மீட்பு ( எபிரேய மொழியில் உயிர் எழுத்துக்கள் இல்லாததால் ஓசியா, உசியா, யோசுவா, இயேசு அனைத்திற்கும் ஒரே பொருள் தான்).
2) எரேமியா - கர்த்தர் உயர்ந்தவர்
3) எசேக்கியேல் - தேவனுடைய வல்லமை
4) தானியேல் - தேவன் நீதியுள்ளவர்.
விளக்கம்:
இந்த 4 தீர்க்கத்தரிசிகளின் பெயர்களுக்குள் அடங்கியிருக்கும் இரகசியம் என்னவென்றால்,
“எமது இரட்சகராகிய இயேசுவானவர் அதி உன்னதமான கர்த்தரும், சர்வ வல்லமையுள்ள, நீதியுள்ள தேவனுமாவார்”.
சிறிய தீர்க்கத்தரிசிகளின் பெயர்களும், அதன் பெயர் அர்த்தமும்.
1)ஓசியா - இரட்சகராகிய கர்த்தர்
2)யோவேல் - கர்த்தரே தேவன்
3)ஆமோஸ் - சுமை சுமப்பவர்
4)ஒபதியா - கர்த்தருடைய ஊழியக்காரர்
5) யோனா - புறா
6) மீகா - கர்த்தருக்கு ஒப்பானவன் யார்?
7) நாகூம் - தேற்றரவாளன்
8) ஆபகூக் - அரவணைத்தல்
9) செப்பனியா - கர்த்தர் மறைந்திருக்கிறார்
10) ஆகாய் - பண்டிகையின் சந்தோஷம்
11) சகரியா - தேவன் நினைவுகூறுவார்
12) மல்கியா - என்னுடைய தூதன்
விளக்கம்:
இந்த 12 தீர்க்கத்தரிசிகளின் பெயர்களுக்குள் அடங்கியிருக்கும் இரகசியம் என்னவென்றால்,
- இரட்சகராகிய கர்த்தர் (இயேசு) சும்மா ஒரு கர்த்தர் அல்ல.
- அவர் ஜீவனுள்ள தேவன்.
- அந்த தேவனாகிய இயேசு நமக்காக இந்த பூமியிலே பிறந்து வந்து நம்முடைய பாவ சுமையை அவர் சுமந்தார்.
- அவர் சொன்னார்- வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று.
- அவர் அப்படி சுமை சுமக்கிறவராக வந்து அவர் ஒரு ஊழியக்காரனை போல வந்தார்.
- ஆகையால் நான் ஊழியம் கொள்ள வராமல், ஊழியம் செய்ய வந்தேன் என்கிறார்.
- அப்படி வந்த இயேசுவானவர் நம்மோடு தொடர்ந்து தங்கியிருந்து நம்மை ஆசீர்வதிப்பதற்கு பரிசுத்த ஆவியானவரை நமக்கு கொடுத்தார்.
- இயேசுவானவர் ஞானஸ்நானம் எடுத்து கரையேறின பொழுது வானம் திறவுண்டது.
- பரிசுத்த ஆவியானவர் புறா வடிவிலே வந்து இறங்கினார்.
- ஆகவே, புறா பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளம்.
- இந்த இயேசுவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும், இந்த கர்த்தருக்கும் ஒப்பானவர் யார்? யாருமில்லை.
- இவரைப் போல ஒரு தெய்வம் கிடையவே கிடையாது.
- அந்த பரிசுத்த ஆவியானவர் நம்மோடு இருந்து நம்முடைய தேற்றரளவாளன் ஆனார்.
- நான் போவேன். நான் போனால் உங்களோடு இருப்பதற்கு ஒரு தேற்றரளவாளன் ஐ அனுப்புவேன் என்று சொன்னார்.
- 1 கொரி 6:19 ன் படி அவர் நம்முடைய சரீரத்திற்குள் வாசமாயிருக்கிறார்.
- நம்முடைய சரீரம் அவருடைய ஆலயமாகிறது.
- அப்போஸ்தலர் 2 ம் அதிகாரத்தின்படி பரிசுத்த ஆவியானவர் நம்மை மூடி, நம்மை அரவணைத்து.
- பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை நமக்கு கொடுத்து, அந்நிய பாஷை , தீர்க்கத்தரிசனம் போன்ற ஆசீர்வாதங்களையும் நமக்கு கொடுக்கிறார்.
- ஆம். உலகத்திற்கு கர்த்தர் மறைந்திருக்கிறார்.
- நீதியின் சூரியன் உலகத்திற்கு தெரியாது ஏன்?
- உலகம் பாவம் என்னும் அந்தகாரத்திலே, இருட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கிறபடியினால் அவர்களுக்கு தேவன் மறைந்திருக்கிறார்.
- ஆனால் நமக்கு கர்த்தர் பண்டிகையின் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறார்.
- பிலிப்பியர் 4:4 ல் சொல்லுகிறார், கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
- மறுபடியும் சொல்லுகிறேன் சந்தோஷமாய் இருங்கள் என்று.
- துக்கப்பட ஆயிரம்காரணங்கள் இருக்கலாம்.
- ஆனால் சந்தோஷப்பட ஒரே காரணம் .
- கர்த்தராகிய இயேசு மற்றும் அவர் கொடுத்த இரட்சிப்பு.
- கர்த்தர் எங்களை ஒரு போதும் மறக்கிறவரல்ல.
- தேவன் எப்பொழுதும் நம்மை அவருடைய நினைவில் வைத்திருக்கிறார்.
- நினைவு கூறுகிறார்.
- இன்றைக்கு உலகத்தில் ஆண்டவருடைய பிரதிநிதிகளாக கர்த்தருடைய தூதர்களாக நாம் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.
Comments
Post a Comment