சங்கீதம் 25 விளக்கவுரை
வழிகாட்டுதலுக்கும் பாதுகாப்பிற்கும் ஆன ஜெபம்
- தனிப்பட்ட புலம்பல்
- அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார். -லூக்கா 9 : 62
- இந்த சங்கீதம் சரியான பாதையைப் பற்றியது. சரியான பாதை எளிதானது அல்ல என்று அது நமக்கு சொல்கிறது. வாழ்க்கை கடினமாகிவிட்டது என்று தேவனை நம்புவதை நிறுத்த வேண்டாம் என்று சங்கீதம் 25 நமக்குக் கற்பிக்கிறது.
- Acrostic Psalm என்று அழைக்கப்படும் -அகர வரிசையில் (1-22)அமைந்துள்ளது. எபிரேய எழுத்துக்கள் Aleph to Tav வரை 22 எழுத்துக்கள்.
- சங்கீதம் 25: 1 - 7: தேவன் தம்முடைய பாவங்களை நினைவில் கொள்ளமாட்டார் என்றும் தேவன் தனக்கு வழிகாட்டியாக இருப்பார் என்றும் தாவீது ஜெபிக்கிறார். தாவீது தனது எதிரிகளுக்கு எதிராக தேவனிடம் உதவி கேட்கிறார்.
- சங்கீதம் 25: 8 - 14: தாவீது தேவனைப் பற்றி சொல்கிறார். தேவன் இப்படி இருப்பதால், அவர் தாவீதுக்கு பதிலளிப்பார், அவருக்கு உதவி செய்வார்.
- சங்கீதம் 25:15 - 21: தாவீது தேவனிடம் தன் எதிரிகள் தன்னைத் துன்புறுத்தியதாகவும், அவரை சோகமடைய செய்ததாகவும் சொல்கிறார். மீண்டும் அவர் தேவனிடம் உதவி கேட்கிறார்.
- வசனம் 22 : இஸ்ரவேல் இரண்டு விஷயங்களைக் குறிக்கிறது:
- 1. இஸ்ரவேல் தேசத்தில் வாழ்ந்த யூதர்கள்;
- 2. யூதர்களின் தேவனை நம்புகிற எல்லா மக்களும் (இதில் கிறிஸ்தவர்களும் அடங்குவர்).
————————————————————————-——
கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
-சங்கீதம் 25 : 1
Psalms 25:1 (A Psalm of David.) Unto thee, O LORD, do I lift up my soul.
எபிரேய எழுத்து மற்றும் அர்த்தம்:
Aleph- power, leader, strength, ox, God, creator, first, leader, lord, king, sovereign
எபிரேய எழுத்து கொண்டு வசனத்தின் அர்த்தம்:
தேவன்ஒருவரே முதன்மையானவர். அவரே மகிமை, பெலன், ராஜா, போதகர்.
இணை வசனம்:
உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
-சங்கீதம் 86 : 4
அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
-சங்கீதம் 143 : 8
விளக்கம்:
- “நான் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்”, இது தாவீது ஆண்டவருடன் பற்றுதலாய் இருப்பதற்கான தெளிவான விளக்கம் .
- தேவனை வணங்குவதில், நம்முடைய இருதயங்களை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
- ஒவ்வொரு முறையும் நாம் ஜெபிக்கும்போது, நம்முடைய ஆத்துமாவை தேவனிடம் உயர்த்துவோம்.
- ஜெபம் என்பது தேவனோடு ஐக்கியப்படுவதாகும்.
- சில சமயங்களில் நம் ஆத்துமா மாம்சத்தைப் பின்பற்ற வேண்டுமா, அல்லது ஆவியை பின்பற்ற வேண்டுமா என்று போராடுகிறது.
- எனவே ஆத்துமாவை பரிசுத்த ஆவியிடம் ஒப்பு கொடுங்கள்.
————————————————————————-
என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும்.
-சங்கீதம் 25 : 2
Psalms 25:2 O my God, I trust in thee: let me not be ashamed, let not mine enemies triumph over me.
எபிரேய எழுத்து மற்றும் அர்த்தம்:
Bet- House, temple, tabernacle, in tent, body dwelling, universe
எபிரேய எழுத்து கொண்டு வசனத்தின் அர்த்தம்:
தாவீது சொல்கிறார், சத்துருக்கள் என்னை மேற்கொள்ளாதப்படி என்னை உமது வீடாகிய கூடாரத்திற்குள் மறைத்துக் கொள்ளும்.
இணை வசனம்:
1. கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
-சங்கீதம் 34 : 8
2. அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும்.
-சங்கீதம் 13 : 4
3. ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புறவிழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்.
-ஏசாயா 49 : 23
4. என் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அடைக்கலம் புகுகிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும்.
-சங்கீதம் 7 : 1
5.நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என் நம்பிக்கை விருதாவாய்ப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாதேயும்.
-சங்கீதம் 119 : 116
6.மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
-ரோமர் 5 : 5
விளக்கம்:
- நாமும் தாவீது போலவே சொல்ல கற்றுக் கொள்வோம்
- எல்லா கஷ்டமான சூழ்நிலைகளிலும் , தேவனே உங்களை மட்டுமே நம்பியிருக்கிறோம். எனவே நாங்கள் வெட்கப்பட்டு போகக்கூடாது என ஜெபிப்போம்.
- நம்முடைய சத்துருக்களை தேவனிடம் ஒப்புக்கொடுப்போம். நாம் நியாயத்தீர்ப்பு செய்யக் கூடாது.
————————————————————————
உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக.
-சங்கீதம் 25 : 3
Psalms 25:3 Yea, let none that wait on thee be ashamed: let them be ashamed which transgress without cause.
எபிரேய எழுத்து மற்றும் அர்த்தம்:
Gimmel- நடை, உடை, பாவனை, பாதம், Foot, Camel, Pride, to lift up.
எபிரேய எழுத்து கொண்டு வசனத்தின் அர்த்தம்:
ஆண்டவரே, உம் பாதத்தில் சரண் அடையும் அனைவரும் வெட்கப்படமாட்டார்கள்.
இணை வசனம்:
1. இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.
-சங்கீதம் 123 : 2
2. தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.
-நீதிமொழிகள் 20 : 22
விளக்கம்:
முகாந்தரமில்லாமல்- காரணமின்றி
- தாவீது தனக்காக ஜெபித்தது போல , கர்த்தரை நம்புகிற ஒவ்வொருவருகக்காகவும் ஜெபிக்கிறார்
- காரணமின்றி துரோகம் செய்பவர்கள் மாத்திரம் வெட்கப்பட்டு போகட்டும் என்று கூறுகிறார்.
- தேவனை நம்பின அனைவரும் தலை நிமிர்ந்து நடப்பார்கள். ஒருபோதும் வெட்கப்பட்டு போனதில்லை.
- நாமும் தாவீதை போல மற்றவர்களுக்காக ஜெபிக்க கற்றுக் கொள்வோம்.
கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.
-சங்கீதம் 25 : 4
Psalms 25:4 Shew me thy ways, O LORD; teach me thy paths.
எபிரேய எழுத்து மற்றும் அர்த்தம்:
Dalet- Tent door, pathway
எபிரேய எழுத்து கொண்டு வசனத்தின் அர்த்தம்:
தேவனுடைய பாதைகளை, எனக்கு கற்றுத் தாருங்கள்.
இணை வசனம்:
1. உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த ஜாதி உம்முடைய ஜனமென்று நினைத்தருளும் என்றான்.
-யாத்திராகமம் 33 : 13
2. மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
-யோவான் 8 : 12
3. முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.
-எபேசியர் 5 : 8
4. அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
-1 யோவான் 1 : 7
விளக்கம்:
- தேவனே! உங்கள் பாதைகளை எனக்குக் கற்றுக் கொடுங்கள் என்று கேட்கிறார்.
- நாம் பின்பற்ற வேண்டியது இயேசுவின் வழி.
- அந்த பாதை மிகவும் குறுகினதாகவும், செல்வது கடினமாகவும் இருக்கும்.
- ஆனாலும், மனந்தளராமல், தேவன் கை பிடித்து கொண்டே அந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதை கற்றுக் கொள்வோம்.
————————————————————————
உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.
-சங்கீதம் 25 : 5
Psalms 25:5 Lead me in thy truth, and teach me: for thou art the God of my salvation; on thee do I wait all the day.
எபிரேய எழுத்து மற்றும் அர்த்தம்:
Hey- Behold,பார், reveal, show, grace, mercy, what comes from, spirit.
எபிரேய எழுத்து கொண்டு வசனத்தின் அர்த்தம்:
கிருபை, இரக்கத்தின் முழு வெளிப்பாடு, மனிதனாகிய இயேசு சிலுவையில் அறையப்பட்டது தான். அதை ஒவ்வொரு நாளும் நோக்கிப் பார்த்து நாம் ஆண்டவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.
இணை வசனம்:
1. எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
-யோவான் 1 : 17
2. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
-யோவான் 14 : 6
3. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
-யோவான் 16 : 13”
விளக்கம்:
- இயேசுவே சத்தியமும், வழியுமாய் இருக்கிறார்.
- இந்த வசனம் முழுவதும் இயேசுவை பற்றி கூறுகிறது.
- நமது இரட்சிப்பின் தேவன் இயேசு கிறிஸ்து.
- ஒவ்வொரு நாளும், நாம் பொறுமை இழக்காமல், தேவனை நோக்கி காத்து கொண்டிருப்போம்.
————————————————————————
கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவை அநாதி காலமுதல் இருக்கின்றனவே.
-சங்கீதம் 25 : 6
Psalms 25:6 Remember, O LORD, thy tender mercies and thy lovingkindnesses(அன்புள்ள தயவு); for they have been ever of old.
எபிரேய எழுத்து மற்றும் அர்த்தம்:
Vav-Nail,peg, join, secure, establish, man
எபிரேய எழுத்து கொண்டு வசனத்தின் அர்த்தம்:
கர்த்தருடைய இரக்கங்களையும், அன்புள்ள தயவையும் , சிலுவையில் அவர் மேல் குத்தப்பட்ட ஆணியின் மூலம் அறியலாம்.
இணை வசனம்:
1. கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.
-சங்கீதம் 103 : 17
2. கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
-1 நாளாகமம் 16 : 34
விளக்கம்:
- தேவன் ஒருபோதும் மாறமாட்டார்.
- மனிதகுலத்தின் மீது கர்த்தர் வைத்திருக்கும் அன்பு புரிந்துகொள்வது எளிதல்ல.
- நாம் பாவத்தில் இருந்தபோது, தேவன் இரட்சகரை அனுப்பினார்.
- நாம் இரட்சிக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் அல்ல
- ஆனால் அவர் நம்மை நேசித்ததால். அவருடைய கிருபை என்றென்றும் நிலைத்திருக்கும்.
- அவருடைய காருணியம்(அன்புள்ள தயவு) பூர்வ காலமுதல் இருக்கிறது.
————————————————————————
என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.
-சங்கீதம் 25 : 7
Psalms 25:7 Remember not the sins of my youth, nor my transgressions: according to thy mercy remember thou me for thy goodness' sake, O LORD.
எபிரேய எழுத்து மற்றும் அர்த்தம்:
Zayin- plow, weapon, cut off,pierce
எபிரேய எழுத்து கொண்டு வசனத்தின் அர்த்தம்:
கர்த்தர் நம்முடைய பாவங்களையும், மீறுதல்களையும் அகற்றி, நமது மனங்களை களைந்து புது நிலமாக்கி வைத்துள்ளார்.
இணை வசனம்:
1. மகா கசப்பான தீர்ப்புகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப்பண்ணுகிறீர்.
-யோபு 13 : 26
2. தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
-சங்கீதம் 51 : 1
3. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.
-2 சாமுவேல் 12 : 11(மீறுதல்)
4. நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.
-1 யோவான் 1 : 10
5. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
-சங்கீதம் 103 : 2
விளக்கம்:
- பத்ஷேபாவின் விஷயத்தை அவர் நினைவு கூர்ந்து, இளவயதின் பாவம் என்று சொல்லியிருக்கலாம்.
- தாவீதைப் போலவே நாமும் இதே விஷயத்தைக் கேட்கலாம்.
- பாவம் செய்யாதவர்கள் யாரும் இல்லை.
- தேவனின் ஆட்டுக்குட்டியின் (இயேசு கிறிஸ்து) விலைமதிப்பற்ற இரத்தம், அனைவருடைய பாவத்தையும் நீக்கியது.
- இயேசு நம்முடைய பாவத்தை அவருடைய உடலில் சிலுவையில் எடுத்து, அதற்கு பதிலாக அவருடைய நீதியை நமக்குக் கொடுத்தார்.
- இதை ஒவ்வொரு நாளும் நாம் நினைவு கூர்ந்து ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும்.
————————————————————————
கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.
-சங்கீதம் 25 : 8
Psalms 25:8 Good and upright is the LORD: therefore will he teach sinners in the way.
எபிரேய எழுத்து மற்றும் அர்த்தம்:
Chet- tent wall, fence, separation, inner chamber, gate, protect
எபிரேய எழுத்து கொண்டு வசனத்தின் அர்த்தம்:
கர்த்தர் பாவிகளாகிய நமக்கு, நம் பாவத்தை உணரச் செய்து, இரட்சிப்பை தந்து, வேலியடைத்து பாதுகாக்கிறார்.
இணை வசனம்:
கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
-கலாத்தியர் 2 : 20
விளக்கம்:
- தேவன் நல்லவர், நேர்மையானவர், அன்பானவர், உண்மையுள்ளவர் என்பதால்,அவர் பாவிகளுக்கு வழியை கொடுத்தார்.
- இயேசு நம் முன்மாதிரி.
- நாம் கிறிஸ்துவை ஏற்றுகொண்டவர்களாக இருக்க வேண்டுமென்றால், நாம் கிறிஸ்துவைப் போல ஆக வேண்டும்.
- கிறிஸ்துவில் உள்ள ஒவ்வொரு விசுவாசியும், ஒவ்வொரு நாளும் இயேசுவைப் போல இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்
சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்த குணமுள்ளவர்களுக்கு தமது வழியைப் போதிக்கிறார்.
-சங்கீதம் 25 : 9
Psalms 25:9 The meek will he guide in judgment: and the meek will he teach his way.
எபிரேய எழுத்து மற்றும் அர்த்தம்:
Tet-Basket, Snake. Surround,twists
எபிரேய எழுத்து கொண்டு வசனத்தின் அர்த்தம்:
சாந்தகுணமுள்ளவர்களை, ஆண்டவர் தம்முடைய பிரசன்னத்தினால் சுற்றி பாதுகாக்கிறார்.
இணை வசனம்:
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கிவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
-மத்தேயு 5 : 5
அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
-1 பேதுரு 3 : 4
கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப்போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்.
-எரேமியா 10 : 24
(எரேமியா 10:24 கர்த்தாவே, என்னைத் திருத்துங்கள், ஆனால் நியாயத்தீர்ப்புடன்; உம்முடைய கோபத்தில் அல்ல, நீ என்னை ஒன்றும் செய்யாதபடிக்கு.)
விளக்கம்:
- சாந்தகுணமுள்ளவர்களும் மனத்தாழ்மை உள்ளவர்களும் தங்களை கர்த்தருக்கு முன்பு தாழ்த்துகிறார்கள்.
- கர்த்தர் தம்முடைய ஆவியினால் சத்தியத்திற்குள் நம்மை வழிநடத்துவார்.
- ஒரு நபர் மீது பெருமைமிக்க ஆவி இருந்தால் அவர்களை தேவன் விரும்புவதில்லை என்பதை நாம் அறிவோம்.
- இயேசு இம்மானுவேல் (தேவன் நம்முடன்) இருந்தபோதிலும் அவர் சாந்தகுணமுள்ளவர்.
- மோசே மிகவும் சாந்தகுணமுள்ள மனிதர் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
- சாந்தகுணமுள்ளவர்களுக்கு எளிதில் தேவனுடைய வழியை கற்பிக்க முடியும்.
- நாம் நம்மைத் தாழ்த்தி மனந்திரும்ப வேண்டும், பிறகு கர்த்தர் நம்மைக் காப்பாற்றுவார்.
————————————————————————
கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை.
-சங்கீதம் 25 : 10
Psalms 25:10 All the paths of the LORD are mercy and truth unto such as keep his covenant and his testimonies.
எபிரேய எழுத்து மற்றும் அர்த்தம்:
Yod- Arm and hand ,work deed(வேலை பத்திரம்), activity
எபிரேய எழுத்து கொண்டு வசனத்தின் அர்த்தம்:
கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிற நியாயப்பிரமாணத்தை கைகொள்ளுகிறவர்களுக்கு அதற்கேற்ற ஊதியமாகிய கிருபையும், சத்தியமும் நமக்கு கிடைக்கும்.
இணை வசனம்:
1. அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை.
-ரோமர் 7 : 18
2. அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.
-1 சாமுவேல் 15 : 22
3. அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.
-1 யோவான் 2 : 3
விளக்கம்:
- தேவன் ஒருபோதும் மாறாததால், அவர் எப்போதும் சாந்தகுணமுள்ளவர்களுக்கு "தயவு" செய்வார்.
- நாம் தேவனின் உடன்படிக்கையை சார்ந்து இருக்கிறோம்.
- கர்த்தருடைய எல்லா பாதைகளும், அதாவது அவருடைய வாக்குறுதிகள் மற்றும் அவருடைய எல்லா ஏற்பாடுகளும் கிருபை மற்றும் சத்தியம்.
- தேவனை பிரியப்படுத்த விரும்புவோர், அவருடைய எல்லா அறிவுறுத்தல்களுக்கும் கீழ்ப்படிய முயற்சி செய்ய வேண்டும்.
- நாம் ஒரு விசுவாசி என்பதற்கான அடையாளம், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பது தான்.
————————————————————————
கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்.
-சங்கீதம் 25 : 11
Psalms 25:11 For thy name's sake, O LORD, pardon mine iniquity; for it is great.
எபிரேய எழுத்து மற்றும் அர்த்தம்:
Kaf- palm of hand(salvation), to open , cover, give, close, crowning, accomplishment
எபிரேய எழுத்து கொண்டு வசனத்தின் அர்த்தம்:
உம்முடைய கரத்தின் இரட்சிப்பு மூலம் என் அக்கிரமங்களை மன்னியுங்கள் ஆண்டவரே!
இணை வசனம்:
என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்.
-சங்கீதம் 31 : 3
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
-1 யோவான் 1 : 9
விளக்கம்:
- என்னுடைய அக்கிரமத்தை மன்னியுங்கள், ஏனென்றால் அது மிக பெரியது என்று தாவீது வேண்டுகிறார்.
- ஏனென்றால் நீங்கள் மன்னிக்கும் பெரிய தேவன்.
- குற்றத்தை ஒப்புக்கொள்வது, இது மன்னிப்புக்கான முதல் படியாகும்.
- நாம் ஜெபிக்கும்போது, இயேசுவின் பெயரால் பிதாவிடம் ஜெபிப்பது முக்கியம்.
————————————————————————
கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
-சங்கீதம் 25 : 12
Psalms 25:12 What man is he that feareth the LORD? him shall he teach in the way that he shall choose.
எபிரேய எழுத்து மற்றும் அர்த்தம்:
Lamed- staff, good, control, towards, Holy Spirit , authority, rod, tongue, teaching
எபிரேய எழுத்து கொண்டு வசனத்தின் அர்த்தம்:
கர்த்தருக்கு பயப்படுகிறவனுக்கு, பிதாவின் வழியை நமக்கு அறிவிக்கிறவர் பரிசுத்த ஆவியானவர். இந்த இடத்தில் ‘தாம்’ என்பது திரித்துவத்தை குறிக்கிறது.
இணை வசனம்:
1. நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.
-சங்கீதம் 37 : 23
2. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்.
-நீதிமொழிகள் 1 : 7
3. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.
-நீதிமொழிகள் 9 : 10
4. நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.
-சங்கீதம் 5 : 7
விளக்கம்:
- கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷன் எவனோ, அவனுக்கு தேவன் அவருடைய வழிகளை காண்பிப்பார்.
- இயேசுவே வழியும், சத்தியமும் ஆவார்.
- தாம்- திரித்துவம்.
- கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷனுக்கு, பிதாவானவர் இயேசு என்ற வழியை, பரிசுத்த ஆவியானவர் மூலமாய் உணர்த்துவார்.
அவன் (கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷன்) ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்.
-சங்கீதம் 25 : 13
Psalms 25:13 His soul shall dwell at ease; and his seed shall inherit the earth.
எபிரேய எழுத்து மற்றும் அர்த்தம்:
Mem- water (salvation),chaos, disorder, strength, mighty, messiah
எபிரேய எழுத்து கொண்டு வசனத்தின் அர்த்தம்:
இயேசுவை ஏற்றுக் கொண்டு இரட்சிக்கப்பட்ட அனைவரும் ஆபிரகாமின் சந்ததி அதாவது தேவனுடைய சந்ததி எண்ணப்படுவார்கள்.
இணை வசனம்:
1. கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.
-நீதிமொழிகள் 19 : 23
2. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.
-சங்கீதம் 37 : 11
3. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.
-கலாத்தியர் 3 : 29
விளக்கம்:
- கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷனுடைய ஆத்துமாக்கு, நன்மை மட்டுமே கிடைக்கும்.
- ஆத்தும நன்மை- இரட்சிப்பு
- கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட அனைவரும் ஆபிரகாமுடைய சந்ததியினர் என்று உடன்படிக்கை கூறுகிறது.
கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.
-சங்கீதம் 25 : 14
Psalms 25:14 The secret of the LORD is with them that fear him; and he will shew them his covenant.
எபிரேய எழுத்து மற்றும் அர்த்தம்:
Nun- seed, fish,activity, life, action
எபிரேய எழுத்து கொண்டு வசனத்தின் அர்த்தம்:
நமது வாழ்க்கையின் விதை கர்த்தரின் உடன்படிக்கை. ஒவ்வொரு நாளும் அதை நினைவு கூற வேண்டும்.
இணை வசனம்:
மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது.
-நீதிமொழிகள் 3 : 32
மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.
-உபாகமம் 29 : 29
தேவனுடைய இரகசியச்செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது.
-யோபு 29 : 4
என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
-யோவான் 14 : 26
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கைபண்ணுவேன்.
-எரேமியா 31 : 31
போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.
-லூக்கா 22 : 20
விளக்கம்:
- இயேசு உவமைகளில் பேசினார்.
- அதுவே இரகசியம்
- இதனால் விசுவாசமற்ற உலகம் அவர் தனது குழந்தைகளுக்கு வெளிப்படுத்தும் இரகசியங்களை புரிந்து கொள்ளாது.
- ஒவ்வொரு முறையும் நீங்கள் வானத்தில் வானவில் பார்க்கும்போது, தேவன் மனிதனுடன் செய்த உடன்படிக்கையை நினைவில் கொள்ள வேண்டும்.
- பரிசுத்த ஆவியானவர் எல்லா உண்மையையும் நமக்குக் கற்பிக்கிறார்.
- வேதமே, மனிதகுலத்திற்கு தேவனை வெளிப்படுத்துவதாகும்.
- கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு அவர் தம்முடைய உடன்படிக்கை வார்த்தைகளை, அவரது வழிகளை, ஆவிக்குரிய இரகசியங்களை தெரிவிக்கிறார். அவர்களோடு வாசம் செய்கிறார்.
- அவர்களை நீதியின் பாதையில் நடத்துகிறார்.
- தேவனுக்கு பயந்தவர்களுக்கு தேவன் கிருபை செய்கிறார்.
- இந்த பயமானது பயந்து நடுங்குவது அல்ல, பிசாசுகளும் தேவனுக்கு பயந்து நடுங்குகின்றன.
- ஆனால் இந்த பயம் என்பது தேவனுக்கு கனம், மகிமை செலுத்துவது, அவரது செவி சாய்த்து, அவரது வழிகளில் நடப்பவர்களை குறிக்கிறது.
————————————————————————
என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கி கொண்டிருக்கின்றன; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.
-சங்கீதம் 25 : 15
Psalms 25:15 Mine eyes are ever toward the LORD; for he shall pluck my feet out of the net.
எபிரேய எழுத்து மற்றும் அர்த்தம்:
Samekh- Hand on staff, support, prop, turning aside, twisting, protection ,laying hands
எபிரேய எழுத்து கொண்டு வசனத்தின் அர்த்தம்:
என் கால்களை வலைக்கு நீங்கலாக்கி, என் மனதை பிரச்சினைகளில் இருந்து விடுவித்து அவர் கரங்களால் மூடி, பாதுகாப்பு கொடுக்கிறார்.
இணை வசனம்:
ஆனாலும் ஆண்டவராகிய கர்த்தாவே, என் கண்கள் உம்மை நோக்கியிருக்கிறது; உம்மை நம்யிருக்கிறேன்; என் ஆத்துமாவை வெறுமையாக விடாதேயும்.
-சங்கீதம் 141 : 8
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.
-சங்கீதம் 121 : 2
அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவரீரே எனக்கு அரண்.
-சங்கீதம் 31 : 4
விளக்கம்:
- நாம் இந்த உலகத்தில் இருந்தாலும், நம் கண்கள் இந்த உலகத்தை உற்று நோக்காமல், தேவனையே நோக்கி இருக்க வேண்டும்.
- நாம் உலகில் இருக்கலாம், ஆனால் நாம் உலகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.
- நம்முடைய கண்களும், தாவீதைப் போலவே, பரலோகத்திற்கு திரும்ப வேண்டும்.
- இந்த பூமியில் உள்ள மாம்ச இச்சையில், பிரச்சனையில் நாம் சிக்கிக்கொள்ளலாம்.
- ஆனால் எங்கிருந்து நமக்கு உதவி வருகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
- நமக்கு உதவி கர்த்தரிடமிருந்து வருகிறது.
————————————————————————
என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்பட்டவனுமாய் இருக்கிறேன்.
-சங்கீதம் 25 : 16
Psalms 25:16 Turn thee unto me, and have mercy upon me; for I am desolate and afflicted.
எபிரேய எழுத்து மற்றும் அர்த்தம்:
Ayin- Eye, to see, experience , understand,insight perceive
எபிரேய எழுத்து கொண்டு வசனத்தின் அர்த்தம்:
நான் மிகவும் தனிமையாக உணர்கிறேன் ஆண்டவரே! என்னை உம் கண்களால் நோக்கிப் பாரும். என் மனதை புரிந்து கொள்ளுங்கள் .
இணை வசனம்:
கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும்.
-சங்கீதம் 69 : 16
வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துக்களுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோகும்.
-லூக்கா 21 : 26
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
-மத்தேயு 28 : 20(தனிமை)
விளக்கம்:
- பூமியில் இன்னமும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.
- நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைப் பார்க்க ஆரம்பித்தால், நமது மனம் சோர்வடைந்து விடும்.
- நாம் தனிமையை உணர்ந்தால், புதிய ஏற்பாட்டு வசனமாகிய “நான் உங்களுடனேகூட இருக்கிறேன்“ என்று இயேசு கிறிஸ்து சொன்னதை நினைவு கூர்ந்து ஜெபிப்போம்.
————————————————————————
என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன; என் இடுக்கண்களிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும்.
-சங்கீதம் 25 : 17
Psalms 25:17 The troubles of my heart are enlarged: O bring thou me out of my distresses.
எபிரேய எழுத்து மற்றும் அர்த்தம்:
Pey- Mouth (symbolize Bible),word, speak, open
எபிரேய எழுத்து கொண்டு வசனத்தின் அர்த்தம்:
இருதயம் வியாகுலப்படும் போது, வாய் விட்டு வேதத்தை வாசியுங்கள்.
இணை வசனம்:
நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.
-சங்கீதம் 119 : 67
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
-யோவான் 14 : 27
கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
-லூக்கா 4 : 18(துன்பம்)
விளக்கம்:
- நம்முடைய இருதயம் கலங்க வேண்டாம் என்று தேவன் நம்மிடம் கூறியிருக்கிறார்.
- தேவன் நம்முடைய துன்பங்களிலிருந்து நம்மை வெளியே கொண்டு வருவார்.
- “இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும்” என்று லூக்கா புத்தகத்தில் சொல்லி இருக்கிறதை சொல்லி ஜெபிப்போம்.
- அவர் செய்வார் என்ற முழு நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.
- தேவனை நம்புங்கள், அவர் உங்களை விடுவிப்பார்.
————————————————————————
என் சிறுமையையும் என் துன்பத்தையும் பார்த்து, என்பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.
-சங்கீதம் 25 : 18
Psalms 25:18 Look upon mine affliction and my pain; and forgive all my sins.
எபிரேய எழுத்து மற்றும் அர்த்தம்:
Tsade- Man on side, desire, need, to pull, a hook, desire, harvest
எபிரேய எழுத்து கொண்டு வசனத்தின் அர்த்தம்:
தேவையில்லாத களைகளை அறுவடை செய்வது போல, என் பாவங்களையும், எனது தேவையில்லாத ஆசைகளையும் பிடுங்கி போடுங்கள் ஆண்டவரே!
இணை வசனம்:
ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான்.
-2 சாமுவேல் 16 : 12
அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
-மத்தேயு 9 : 2
அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
-யாக்கோபு 5 : 15
என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
-யோவான் 16 : 33(சோகம்)
விளக்கம்:
- தாவீது ஆண்டவரிடம் தன் பாவங்களை மன்னிக்கும் படி மன்றாடினார்.
- ஆனால் நமக்கோ, நம். பாவங்கள் அனைத்தும் என்றோ சிலுவையில் மன்னித்தாகிவிட்டது.
- நாம் பாக்கியவான்கள்.
- மறுபடியும் பாவத்தில் விழாமல் இருப்பதற்காக ஜெபிப்போம்.
————————————————————————
என் சத்துருக்களைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, உக்கிர வெறுப்பாய் என்னை வெறுக்கிறார்கள்.
-சங்கீதம் 25 : 19
Psalms 25:19 Consider mine enemies; for they are many; and they hate me with cruel hatred.
எபிரேய எழுத்து மற்றும் அர்த்தம்:
Qof- sun on horizon, (சூரியன் அஸ்தமிக்கிறது) what is behind, what is final, last, least, final, future, Axe
எபிரேய எழுத்து கொண்டு வசனத்தின் அர்த்தம்:
நாம் மிகவும் கடைசியாக(least) நினைக்க வேண்டியவர்கள் நம்முடைய சத்துருக்கள். அவர்கள் நாவு கோடரியை போன்றது. நம்மை மிகவும் காயப்படுத்தும். சூரிய அஸ்தமிக்கிறதுக்குள்ளாக அவர்களை நாம் மன்னித்து விட வேண்டும்.
இணை வசனம்:
உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.
-சங்கீதம் 91 : 7
அப்சலோம் பலிகளைச் செலுத்தும் போது, தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான்; அப்படியே கட்டுப்பாடு பலத்து, ஜனங்கள் அப்சலோமினிடத்தில் திரளாய் வந்து கூடினார்கள்.
-2 சாமுவேல் 15 : 12
உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும்பண்ணுவேன்.
-ஆதியாகமம் 49 : 7
விளக்கம்:
- நமக்கு சத்துருக்களாக, நம்மோடு இயேசுவைப் பற்றி தர்க்கிக்கிறவர்களை தேவனிடம் ஒப்புக் கொடுப்போம்.
- நாம் நியாயம் தீர்க்க கூடாது.
- தேவன் நம் சார்பில், நமக்காக அவர்களோடு போராடுவார்.
- புதிய ஏற்பாட்டின் படி, நம்மை வெறுக்கிறவர்களையும் சிநேகிப்போம்.
————————————————————————
என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
-சங்கீதம் 25 : 20
Psalms 25:20 O keep my soul, and deliver me: let me not be ashamed; for I put my trust in thee.
எபிரேய எழுத்து மற்றும் அர்த்தம்:
Resh- Head, person, first, highest, most important
எபிரேய எழுத்து கொண்டு வசனத்தின் அர்த்தம்:
உங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து , உங்களில் அடைக்கலம் புகுந்துள்ளேன் என்று தாவீது கூறுகிறார்.
இணை வசனம்:
என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும்.
-சங்கீதம் 25 : 2
விளக்கம்:
- பிரச்சினைகள் நமக்கு நம் பாவத்தினாலும், சாத்தானாலும், உலகத்தினாலும் வருகிறது.
- ஆனால் நம்மை வீழ்ச்சியடையாமல் காப்பாற்றும்படி தேவனிடம் ஜெபிக்க வேண்டும்
- தேவன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறவர்கள் வெட்கப்பட்டு போவதே இல்லை.
- தாவீது தேவனை முழு மனதோடு நம்பினது போல, நாமும் நம்புவோம்.
உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; நான் உமக்குக் காத்திருக்கிறேன்.
-சங்கீதம் 25 : 21
Psalms 25:21 Let integrity and uprightness preserve me; for I wait on thee.
எபிரேய எழுத்து மற்றும் அர்த்தம்:
Shin- Eat, consume, teeth, destroy, El shaddai
எபிரேய எழுத்து கொண்டு வசனத்தின் அர்த்தம்:
நாம் உத்தமமும், நேர்மையுமாக நடந்து கொள்ளும் போது சர்வவல்லமையுள்ள தேவன் (El Shaddai) நம்மை காத்து கொள்வார்.
ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.
-ஆதியாகமம் 17 : 1
இணை வசனம்:
அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.
-நீதிமொழிகள் 2 : 7
விளக்கம்:
- நாம் உத்தமமும், நேர்மையுமாய் நடந்தால், தேவனிடத்திலிருந்து நமக்கு பாராட்டு வரும்.
- நன்மை செய்தால், இந்த அற்பமான உலகமே நம்மை பாராட்டும்போது, தேவன் நம்மை காணாமலிருப்பாரோ?
- தேவனுக்காக, ஒவ்வொரு நிமிடமும் காத்திருப்போம்.
- அவர் நம்மை காண்பார்.
தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்.
-சங்கீதம் 25 : 22
Psalms 25:22 Redeem Israel, O God, out of all his troubles.
எபிரேய எழுத்து மற்றும் அர்த்தம்:
Tav- Mark,Sign, covenant, cross, truth, perfection, ownership, zeal
எபிரேய எழுத்து கொண்டு வசனத்தின் அர்த்தம்:
தேவன் நம்முடைய (இஸ்ரவேல்+புறஜாதியார்) அனைத்து பாவங்களையும் சிலுவையிலே கழுவி, புதிய உடன்படிக்கை செய்து மீட்டுக் கொண்டார் என்பதையே இந்த Tav என்ற எழுத்து குறிக்கிறது.
இணை வசனம்:
அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களின்றும் மீட்டுக்கொள்வார்.
-சங்கீதம் 130 : 8
கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.
-ஏசாயா 35 : 10
சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக.
-சங்கீதம் 51 : 18
அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.
-சங்கீதம் 51 : 19
விளக்கம்:
- தனக்கு மட்டுமல்லாமல், முழு இஸ்ரவேல் தேசத்துக்குமே அவர் மீட்பை கேட்கிறார்.
- கிறிஸ்தவர்களான நாம் மீட்கப்பட்டவுடன், நம் குடும்பங்களையும் நண்பர்களையும் மீட்டுக்கொள்ள தேவனிடம் அழ ஆரம்பிக்கிறோம்.
- அது போல, தாவீதும் தேசத்துக்காக மன்றாடுகிறார்.
Comments
Post a Comment