Posts

Showing posts from November, 2021

உன்னதப்பாட்டு எட்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 8

Image
உன்னதப்பாட்டு- அதிகாரம் 8- விளக்கம் ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போலிருந்தீரானால், நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்; என்னை நிந்திக்கவுமாட்டார்கள்.  -உன்னதப்பாட்டு 8 : 1 விளக்கம் : ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போலிருந்தீரானால் சபையாகிய மணவாட்டி பேசுகிறாள்.  எபிரேய மொழியில் கூட அந்த உணர்வுப் பூர்வமான ஆ இருக்கிறது.  உள்ளத்தில் இருந்து வருகின்ற உணர்வாம்.  ஏக்கம் கலந்த ஒன்று.  ஆ இப்படி இருந்திருந்தால் எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும் என்ற உணர்வு. சே! மிஸ் பண்ணிட்டேனே! என்ற உணர்வு. சில கிறிஸ்தவர்கள் ஏங்குகிறார்கள் ‘நான் ஒரு இஸ்ரவேலனாய் பிறந்திருக்கக் கூடாதா’ என்று.  அந்த அடிப்படையில் தான் இந்த சபையின் அங்கலாய்ப்பை தீர்க்கத்தரிசனமாக உன்னதப்பாட்டு புத்தகம் காட்டுகிறது.  (எ.கா) ஒரு வேளை இயேசுவானவர் தமிழராய் பிறந்திருந்தால், நாம் எந்தளவு உரிமை கொண்டாடி இருப்போம்.  எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்போம்.  அதை தான் இங்கு காட்டுகிறது.  நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன் என் கிறிஸ்தவத்தை நான் இரகசியமாய் வைத்தி...

உன்னதப்பாட்டு ஏழாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 7

Image
உன்னதப்பாட்டு- அதிகாரம் 7- விளக்கம் ராஜகுமாரத்தியே! பாதரட்சைகளிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது; உன் இடுப்பின் வடிவு விசித்திரத் தொழிற்காரரின் வேலையாகிய பூஷணம்போலிருக்கிறது.  -உன்னதப்பாட்டு 7 : 1 விளக்கம் : மணவாளன், மணவாட்டியோடு பேசி அவளை வர்ணிக்கிறார். ராஜகுமாரத்தியே மணவாளன் மணவாட்டியை எவ்வளவு அழகாக அழைக்கிறார்.  பிதா-ராஜா இயேசு-ராஜகுமாரன்(மணவாளன்) சபை- ராஜகுமாரத்தி(மணவாட்டி) பாதரட்சைகளிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது முதல் 9 வசனங்களில் பாதம் முதல் தலை வரை வர்ணிக்கிறார்.  நம்முடைய பாதம் அழகானதாம்.  அதே நேரம் பாதம் வெறுமனே வெளியே தெரிய வைத்தில்லையாம். பாதரட்சை போட்டு இருக்கிறோமாம்.  சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம்பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.  - ஏசாயா 52 : 7 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி , பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, ...