வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 13 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 13 விளக்கம்

பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன.
 -வெளிப்படுத்தல் 13 : 1

பின்பு நான் 
  • இங்கு நான் என்று சொல்லப்படுவது யோவான் அல்ல. 
  • ஏனென்றால் யோவான் பரலோகத்தில் தரிசனத்தில் இதைக் காண்கிறார். 
  • வெளி 4:1 தேவன் யோவானை ஆவியிலே பரலோகத்துக்கு கொண்டு போய் அங்கே இருந்து தான் இந்த சம்பவங்களை அவர் காண்கிறார். 
  • பின் அது யார்?
  • 12 ம் அதிகாரத்தில் வரக் கூடிய சர்ப்பம், சாத்தான் அது. 
கடற்கரை மணலின்மேல் நின்றேன். 
  • எந்தக் கடற்கரை?
  • வெறும் கடல் அல்லது சமுத்திரம் என்று வந்தால் அது மத்தியத் தரைக்கடல். 
  • அடையாளங்கள், உண்மை சம்பவங்கள், உவமைகள் இவற்றை நாம் வேறு பிரித்து பார்க்க வேண்டும். 
  • கடல் என்பது உண்மையான மத்தியத்தரைக்கடல்.
  • அங்கே நிற்கிறதான சர்ப்பம் ஒரு அடையாளம். 
  • அங்கே அந்த கடலில் இருந்து ஒரு மிருகம் எழும்புகிறது, அதுவும் ஒரு அடையாளம். 
அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; 
  • சர்ப்பம் தான் மிருகமாக கடலில் இருந்து எழும்பி வருகிறது என்பதல்ல. 
  • சர்ப்பம் கடற்கரை மணலின் மேல் நின்று கொண்டு,
  • அங்கே சமுத்திரத்தில் இருந்து ஒரு மிருகத்தை எழும்பி வரப் பண்ணுகிறது. 
  • வெளி 12:3 ல் நாம் சர்ப்பத்தைக் குறித்துப் பார்த்தோம். 
  • வெளிப்படுத்தல் புத்தகத்தில் சிவப்பு நிறம் என்பது இரத்தம் சிந்துதலுக்குரிய அடையாளமாக சொல்லப்படுகிறது. 
  • அது அழிவிற்கு, யுத்தத்திற்கு அடையாளமாக சொல்லப்படுகிறது.
  • சர்ப்பம் என்றாலே அதன் அர்த்தம் சாத்தான் தான். 
  • அப்படியென்றால் சிவப்பு நிறமாகிய வலுசர்ப்பமாகிய சாத்தான் என்று சொல்லப்படுகிற பொழுது அழிவையும், யுத்தத்தையும், இரத்தம் சிந்துதலையும் உண்டாக்குகின்ற சாத்தான் என்று அர்த்தம். 
  • 7 தலைகள் மற்றும் 7 கிரீடங்கள் என்று சொல்லப்படுவது அவனிடம் முழுமையான அதிகாரம் கொடுக்கப்பட்டு விட்டது என்று சொல்லப்படுகிறது. 
  • சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு இஸ்ரவேலரைத் தவிர மற்ற எல்லா மக்களையும் ஆட்சி செய்வது இந்த சாத்தான்.     

வெளி 12:3

வெளி 13:1

சர்ப்பம்

மிருகம்

7 தலைகள்

7 தலைகள்

10 கொம்புகள்

10 கொம்புகள்

7 முடிகள் (கிரீடங்கள்)

10 முடிகள் (கிரீடங்கள்)

சம்பூரணம்

எண்ணிக்கை

வல்லமை அதிகம்

வல்லமை குறைவு


  • இப்பொழுது கடலில் இருந்து வருகிற மிருகத்தைப் பார்த்தால் 10 முடிகள் என்று சொல்லப்படுகிறது. 
  • அப்போது சர்ப்பத்தைப் பார்க்கிலும், மிருகத்திற்கு அதிக வல்லமையா? அப்படியல்ல.
  • 10 என்பது இலக்கங்களிலே சொல்லப்படுகிற எண்ணிக்கை. 
  • அங்கே எண்ணிக்கையில் சொல்லப்படுகிற அதிகமான எண்ணிக்கை தான் இருக்கிறது. 
  • ஆனால் 7 என்று சொல்லும் போது முழுமை மற்றும் பரிபூரணத்தை குறிக்கிறது. 
  • அப்படியானால் சர்ப்பத்திற்கா, அல்லது மிருகத்திற்கா வல்லமை அதிகம்?
  • சர்ப்பத்திற்கு தான். 
  • சாத்தான் முதன்முதலாக இந்த பூமியிலே ஆட்சியை ஏற்படுத்தியது பாபிலோனிலே. 
  • சாத்தான் எப்படி தனக்கென்று ஒரு தலைநகரத்தையோ, அல்லது ஒரு தலைமை தேசத்தையோ ஏற்படுத்தினான் என்பது பாபிலோன் பிரசங்கத்தில் காணப்படுகிறது. 
  • பாபிலோனில் தான் பாபேல் கோபுரம் கட்டப்பட்டது. 
  • பாபேல் என்றால் தேவனிடத்திற்கு போகிற வாசல் என்று அர்த்தம். 
  • உண்மையாகவே தேவனிடத்திற்கு போகிற வாசல் யார்? இயேசு கிறிஸ்து. 
  • இயேசு வருவதற்கு 1000 வருடங்களுக்கு முன்பதாக பிசாசு ஒரு மாயையான வாசலை உண்டாக்க முயற்சித்தான். 
  • ஆகவே தேவன் பாஷகளை தாறுமாறாக்கி போட்டார். 
  • ஆகவே, முழு உலகத்திற்கும் சிதறிப் போனவர்கள் பாபிலோனியர்கள். 
  • 1)பாபிலோனிய அரசியல், 2)பாபிலோனிய மதம், 3)பாபிலோனிய பொருளாதாரம் என்ற 3 ம் உருவாகின.
  • உலகத்தில் உள்ள எல்லா அரசியல்களுக்குள்ளும், எல்லா மதங்களுக்குள்ளும், எல்லா பொருளாதாரத்திற்குள்ளும் அந்த பாபிலோனிய அடிச்சுவடுகள் உள்ளே புதைந்திருக்கிறது. 
  • செய்தது சாத்தான்.
  • இன்றைக்கும் பாபிலோன் ஈராக்-ல் இருக்கிறது. 
  • பின்பு ஒரு நாள் பாபிலோன் மீண்டும் எழும்பும் என்று தீர்க்கத்தரிசனம் இருக்கிறது. 
  • அது எப்படி நடக்கும்?
  •  பின்பு உலகத்தில் ராஜ்யங்கள் உண்டாகின.
  • செனகரிப், சல்மனேசர் என்று சொல்லப்படுகிறதான அசீரிய ராஜ்யங்கள், பேரரசாக எழும்பினது. 
  • நேபுகாத்நேச்சார் என்ற அரசன் அசீரியர்களை தோற்கடிக்கச் செய்து பாபிலோன் என்கிற ஒரு பேரரசை உண்டு பண்ணினான். 
  • மேதியர்களும், பெர்சியர்களும் தரியு என்கிற மேதிய ராஜாவை பெல்தெசாஷ்சார் என்கிற ராஜாவை தோற்கடித்து மேதிய, பெர்சிய ராஜ்யங்களை பேரரசாக உருவாக்கினார்கள். 
  • அதன் பின்பு கி.மு 334 லே Alexander, the great என்று சொல்லப்படுகிறவர் கிரேக்கத்தை ஒரு பேரரசாக உருவாக்கினார்.
  • அதன் பின்பு General Pompey என்ற சொல்லப்படுகிறவர் ரோமை ஒரு பேரரசாக உருவாக்கினார்.
  • அங்கே இருந்து ரோம தேசம், ஒரு ரோம பேரரசாக வளர ஆரம்பித்தது. 
  • Augustus என்கிற ராஜா, அதன் பின்பு Julius என்கிற ராஜா இவர்கள் பேரரசுகளாக எழும்பினார்கள்.
  • அவர்கள் ஐந்தரை நூற்றாண்டுகளாக ஆளுகை செய்தார்கள். 
  • இயேசு கிறிஸ்துவினுடைய காலத்திலே அந்த தேசத்தை ஆட்சி செய்தவர்கள் ரோமர்கள். 
  • இந்த ரோமர்கள், துருக்கியர்களினாலே தோற்கடிக்கப்பட்டார்கள். 
  • ஆனால் அவர்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டு போகவில்லை. 
  • பரிசுத்த ரோம ராஜ்யம் என்று சொல்லி மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து கொண்டு ஸ்தாபிக்கப்பட்டு கொண்டு இருந்தது. 
  • இந்த இரகசியத்தை அறிந்து கொள்ளுங்கள். 
  • இந்த பரிசுத்த ரோம பேரரசு (Holy Roman Empire) என்று சொல்லப்படுவதால் நிகழ்காலத்திலே ஐரோப்பிய நாடுகள்,
  • அவை உலகமெங்கிலும் வியாபித்திருக்கிற ராஜ்யங்கள் அல்லது அதிராஜ்யங்களுடைய அடையாளங்கள் உள்ளே புதைந்திருப்பது ரோமப் பேரரசாக.
  • ரோமப் பேரரசு ஒன்று தான் உலகத்திலே தன்னுடைய மதத்தை உலகப் பேரரசின் மதமாக உருவாக்கியது.
  • அந்த மதம் தான் பாபிலோனிய மதம். 
  • ரோமப் பேரரசுக்குள்ளே பாபிலோனிய அரசியல் முறை உள்ளே புகுந்தது. 
  • பாபிலோனிய மத முறைமை உள்ளே நுழைந்தது. 
  • பாபிலோனிய பொருளாதாரம் உள்ளே நுழைந்தது. 
  • இந்த பாபிலோனிய பேரரசு ரோமப் பேரரசுக்குள்ளே புகுந்து கொண்டதும் ரோம மதமானது பாபிலோன் மதமாக மாறியது. 
  • பாபிலோனியர்களுக்கு ஒரு புதுமையான திறமை இருந்தது, அதாவது பெயர் மாற்றுவது. 
  • நேபுகாத்நேச்சாருடைய காலத்திலே யூதர்களை சிறைப்பிடித்து கொண்டு போன போது 4 வாலிபர்கள் தானியேல் உட்பட அவர்கள் பெயர்களை மாற்றினார்கள். 
  • பாபிலோனியர்கள் ரோம மதத்தைப் பார்த்தார்கள், அது என்ன மதம். 
  • அது தான் கிறிஸ்தவம். 
  • கிறிஸ்தவ மதத்துக்குள்ளே பாபிலோனிய மதத்தைக் கொண்டு வர முடியாது. 
  • எனவே பைபிளில் வருகிற பெயர்களை எடுத்து அவர்களுடைய பாபிலோனிய தெய்வங்களை உள்ளே கொண்டு வந்து அந்த பைபிள் பெயர்களை அவைகளுக்கு வைத்தார்கள். 
  • Semiramis என்கிற பாபிலோனிய தெய்வத்தைக் கொண்டு வந்து அதற்கு மரியாள் எனப் பெயர் வைத்தார்கள். 
  • Tammuz என்கிற பாபிலோனிய தெய்வத்தைக் கொண்டு வந்து அதற்கு இயேசு எனப் பெயர் வைத்தார்கள். அதை தான் இயேசு என்று சொன்னார்கள். 
  • பாபிலோனிய மதத் தலைவர்களை (pontipus) போன்றவர்களை உள்ளே கொண்டு வந்தார்கள். 
  • சபைத் தலைவர்களுக்கு pontip என்று பெயர் வைத்தார்கள். 
  • இன்றைக்கும் போப் ஆண்டவரைச் சொல்லுவது Pontip என்று. 
  • பாபிலோனிய மதங்களை கொண்டு வந்து கிறிஸ்தவத்துக்குள்ளே புகுத்தி அதை ரோம மதமாக்கி அதற்குள்ளே கிறிஸ்தவத்தை புதைத்தார்கள். 
  • 1950 ல் ஒரு பயங்கரமான சம்பவம் நடைபெற்றது. 
  • பரிசுத்த ரோம பேரரசுக்குள்ளே இருக்கிற பிரிவை நீக்குவதற்கான திட்டம் ஒருவனுக்குள்ளே வந்தது. 
  • அங்கு ஏற்படுத்தப்பட்ட பிரச்சனை என்ன?
  • பரிசுத்த ரோம பேரரசுக்குள் இருக்கிற தேசங்கள் ஒன்றை ஒன்று அடித்துக் கொள்கிறது. 
  • German கு விரோதமாக Italy, France, போன்ற தேசங்கள் 1914-1918 வரை முதலாம் உலக யுத்தத்தை நடத்தியது. 
  • 1939-1945 வரை இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. 
  • இந்த இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் ஒருவனுக்கு ஒரு சிந்தனை வந்தது. 
  • நாம் ஒரு பேரரசு.
  • இன்றைக்கு நாம் பிரிந்து அடித்துக் கொள்கிறோம். 
  • ஐரோப்பா என்பது ஒரு தேசம். ஒரு ராஜ்யம். 
  • நாம் ஒரு பாஷையை பேச வேண்டும். 
  • எங்களுக்கு ஒரு பண முறைமை இருக்க வேண்டும்.
  • ஒரு பொருளாதார முறை இருக்க வேண்டும். 
  • இன்றைக்கு நாம் பிரிந்திருக்கிறோம். 
  • Germany, german பாஷை deutsch ஐ பேசுகிறார்கள்.
  • Deutsch-mark என்கிற பணமுறைமையை பயன்படுத்துகிறார்கள். 
  • German ல் இருந்து France போவதற்கு ஒரு borderline இருக்கிறது.
  • France ல் இருக்கிறவர்கள் French பேசுகிறார்கள். 
  • Frank என்கிற பணமுறைமையை பயன்படுத்துகிறார்கள். 
  • France ல் இருந்து Belgium போவதற்கு எல்லைப்பகுதியை பயன்படுத்துகிறார்கள். 
  • Belgium ல் இருக்கிறவர்கள் Belgium France மொழியை பேசுகிறார்கள். 
  • Belgium frank என்கிற பணமுறைமையை பயன்படுத்துகிறார்கள். 
  • Belgium ல் இருந்து Holland போவதற்கு எல்லைப்பகுதியை பயன்படுத்துகிறார்கள். 
  • Holland ல் இருக்கிறவர்கள் Dutch மொழியை பேசுகிறார்கள். 
  • Gildon என்கிற பணமுறைமையை பயன்படுத்துகிறார்கள். 
  • France ல் இருந்து Italy போவதற்கு எல்லைப்பகுதியை பயன்படுத்துகிறார்கள். 
  • Italy ல் இருக்கிறவர்கள் Italian பாஷையைப் பேசுகிறார்கள். 
  • Italian-Liera என்கிற பணமுறைமையை பயன்படுத்துகிறார்கள். 
  • ஒருவனுக்கு ஒரு சிந்தனை வந்தது, இந்தப் பரிசுத்த பேரரசுக்கு என்ன நடந்தது என்ற சிந்தனை. 
  • பிரிந்து சிதைந்து போய் இருக்கிற இந்த தேசம் ஒரு தேசமாக, ஒரு நாடாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனை வந்தது. 
  • Winston Churchill என்ற Britannia உடைய பிரதம மந்திரி. 
  • அந்த சிந்தனை 1950 ல் நிறைவேறியது. 
  • Italy, France, Germany, Holland, Belgium, Luxembourg இந்த 6 தேசங்களும் சேர்ந்து ஐரோப்பிய சங்கம் என்று பெயர் வைத்தார்கள். 
  • அவர்கள் கூடினது இத்தாலியில் இருக்கிற ரோம் நகரில் கூடினார்கள். 
  • ரோமில் தான் ஐரோப்பிய சங்கம் உருவானது. 
  • அந்த சிந்தையை கொண்டு வந்த Winston Churchill அங்கு வரவில்லை. 
  • இந்த 6 நாடுகளும் சேர்ந்து இதை ஆரம்பித்தன. 
  • 6 என்பது மனிதனுடைய இலக்கம். 
  • 13 வது அதிகாரத்தில் 666 இலக்கத்தைப் பற்றிப் பார்ப்போம். 
  • ஐரோப்பிய சங்கமானது வளர்ந்தது. 
  • இன்னும் தேசங்கள் ஒன்றிணைந்தது. 
  • இன்றாகும் போது 28 தேசங்கள் அதற்கு உள்வாங்கப்பட்டுள்ளது. 
  • அதிலே இருக்கிறதான 10 தேசங்கள் மிக முக்கியமான ஆட்சி உரிமையை உடைய தேசங்கள். 
  • அந்த 10 தேசங்கள் தான் அந்த ஐரோப்பிய சங்கத்தின் உடைய ஆட்சி முறையை உடையவர்கள்.
  • மீதியான 18 தேசங்கள் ஐரோப்பிய சங்கத்திடம் இருந்து வாங்கி சாப்பிடுகிறக் கூட்டம். 
  • அதன் பின்பு 1993 லே இவர்கள் பேசினார்கள்.
  • ஐயோ, நாங்கள் ஏன் வேறு வேறு பண முறைமைகளை பயன்படுத்துகிறோம்.
  • ஆகவே நாம் ஒரு பண முறைமையை கொண்டு வருவோம். 
  • Euro என்கிற ஒரு பண முறைமையை கொண்டு வருகிற கருத்து அவர்கள் கொண்டு வந்தார்கள். 
  • 2001 ல் இருந்து மற்ற பண முறைமை ஒழிக்கப்பட்டு எல்லா தேசங்களிலும் euro என்கிற ஒரு பண முறைமையை ஏற்றுக் கொண்டார்கள். 
  • 1946 ல் Sir Winston Churchill என்கிறவரின் நோக்கம் என்ன?
  • We need a United States of Europe. 
  • அவர்கள் 2001 ல் euro என்கிற பணமுறைமையை அறிமுகப்படுத்திய பொழுது அமெரிக்க பணம் மேல் நிலையில் இருந்தது, euro பணம் கீழ்நிலையில் இருந்தது. 
  • 2016 September மாதத்திலே Euro மேலே போய், Dollar கீழே விழுந்து இருக்கிறது. 
  • 1994 லே ஒரு கருத்தை கொண்டு வந்தார்கள்.
  • நாம் எல்லோரும் ஒன்று. 
  • Germany க்கும், France க்கும் இடையில் என்னத்திற்கு எல்லைப்பகுதி?
  • Italy க்கும், France க்கும் இடையில் என்னத்திற்கு எல்லைப்பகுதி?
  • இப்படி இத்தனை எல்லைப் பகுதிகள் எதற்கு?
  • அதனால் எல்லா எல்லைப் பகுதிகளையும் ஒன்றாக்கி ஒரு தேசமாக இருப்போம் என்றார்கள். 
  • 2001 ல் இருந்து euro அறிமுகப்படுத்தப்பட்ட அந்த நாளில் இருந்து அவர்கள் ஒரு visa முறையை ஏற்படுத்திக் கொண்டார்கள் .
  • Schengen visa என்ற visa.
  • இப்போது ஒரு Schengen visa வில் 14 நாடுகளுக்கு போக முடியும். 
  • இன்றும் இந்த ரோமப் பேரரசு நிலைத்திருக்கின்ற முறையை பாருங்கள். 
அதற்கு ஏழு தலைகளும்
  • சர்ப்பத்திற்கு 7 தலைகள் இருந்தது அல்லவா?
  • கடலில் இருந்து வந்த மிருகத்திற்கும் 7 தலைகள் இருந்தது அல்லவா? 
  • இந்த 7 தலைகள் என்பது 7 மலைகளாம். 
  • உலகத்திலேயே ஒரே ஒரு நகரம் தான் 7 மலைகளால் சூழப்பட்ட நகரமாக இருக்கிறது. 

  • அந்த map ஐ கொஞ்சம் சரித்துப் பார்த்தால் ஒரு மிருகத்தினுடைய தோற்றத்தை அந்த 7 மலைகளில் பார்க்கலாம். 
  • அந்த ரோமில் தான் Vatican இருக்கிறது. 
  • கத்தோலிக்க மதத்திற்குள் பாபிலோனிய மதம் இருக்கிறது. 
  • போப் ஆண்டவரின் மதம் அந்த பாபிலோனிய மதம். 
  • ஆகவே அந்த 7 தலைகள் ரோம நகரத்தை காண்பிக்கிறது. 
பத்துக்கொம்புகளும் இருந்தன; 
  • இந்த 2 மிருகங்களுக்கும் 10 கொம்புகள் இருக்கிறது.
  • கொம்பு என்பது மேட்டிமை மற்றும் பெருமையை காண்பிக்கிறது. 
அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும்,
  • அந்த 10 முடிகள் என்பது தான் ஐரோப்பிய நாடுகளில் இருக்கிறதான 10 தேசங்கள்.
  • ஐரோப்பிய சங்கத்தில் இருக்கிற 10 தலைமைத்துவத் தேசங்கள். 
அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன.
  • தூஷணமான நாமம் என்பது என்ன?
  • தேவனை இவர்கள் தூஷிப்பார்கள்.  
  • திருவசனத்தை.
  • இப்போதும் கூட ஐரோப்பிய சங்கத்தில் தேவனுடைய நாமத்தை தூஷிக்கிற மாதிரி சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. (Eg: ஒரு பால் புணர்ச்சி திருமண சட்டம், எல்லா மதங்களும் ஒன்று)
  • ஐரோப்பா சங்கம் என்பது ஒரு ஆபத்தான இடம். 
  • ஐரோப்பிய சங்கத்தின் தலைவனாக வரப் போகிறவன் அவன் மிகவும் வல்லமையான ஒருவன். 
  • இந்த இடத்தில் முதல் மூன்றரை வருடங்கள் முடிந்த பின்பு நாம் பார்ப்பது கடலில் இருந்து எழும்பி வருகிற மிருகம். 
  • ஐரோப்பிய சங்கத்தின் தலைவன். 
  • ஏன் தண்ணீரில் இருந்து எழும்பி வருகிறான்?
  • மத்தியத் தரைக்கடல் என்பது என்ன? 
மத்திய தரைக்கடல்:
  • இன்று நிறைய சமுத்திரங்கள் இருக்கின்றன. 
  • ஆனால் வேதக் காலத்தில் 3 கண்டங்களுடன் (Asia, Africa , Europe) தொடர்புபடுகிற ஒரே கடல் மத்தியத் தரைக்கடல்.
  • Pacific கடல் Asia, America வை சம்பந்தப்படுத்துகிறது. 
  • Atlantic கடல் Africa, America வை சம்பந்தப்படுத்துகிறது. 
  • Mediterranean கடல் Africa, America, Asia இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்துகிறது.
3 கண்டங்களுக்கும்:
  • அப்படியென்றால் மத்தியத் தரைக்கடலில் இருந்து எழும்பி வருகின்ற மிருகம் என்றால் என்ன?
  • அப்படியானால் அந்த காலத்தில் பிசாசினால் ஏற்படுத்தப் போகிற அந்திக்கிறிஸ்து அவன் ஐரோப்பிய ஜாதியான், அவன் ஆப்பிரிக்க தேசத்தான், ஆசிய தேசத்தான். 
  • அவன் இந்த 3 பெருங்கண்டங்களுக்கும் சொந்தமானவன். 
  • 1950 ல் இருந்து இன்று வரையிலே ஐரோப்பிய சங்கத் தலைவராக வந்தது ஐரோப்பியர்கள் மாத்திரமே. 
  • அவர்களுக்கு ஆப்பிரிக்கா, ஆசியாவின் குடியுரிமை இருக்கவில்லை. 
  • ஆனால் பிசாசு ஒரு தலைவனை ஏற்படுத்தப் போகிறான். 
  • இந்த 3 கண்டங்களில் இருக்கிறவர்களும் அந்த தலைவனை ஏற்றுக்கொள்வார்கள். 
3 அந்திக்கிறிஸ்து:
  • அந்த அரசியல் ரீதியான அந்திக்கிறிஸ்துவை முழு உலகமும் தங்கள் தலைவனாக அங்கீகரிக்கும். 
  • இந்த மிருகத்தின் பிறகு இன்னுமொரு மிருகம் வரும். 
  • அவன் தான் மத ரீதியான அந்திக்கிறிஸ்து. 
  • அவன் இன்னுமொரு மிருகத்தை எழுப்புவான்.
  • அது தான் பொருளாதார ரீதியான அந்திக்கிறஸ்து. 
4 நபர்கள்:
  • இந்த 13ம் அதிகாரத்தில் 4 நபர்களை நாம் பார்க்கப் போகிறோம். 
  • (1) சர்ப்பம் என்கிற சாத்தான், (2) அரசியல் ரீதியாக குறிக்கப்படுகிற அந்த மிருகம், அதன் பின்பு பூமியில்  இருந்து எழும்புகிறதான (3) மத ரீதியான அந்திக்கிறிஸ்து, அவர்கள் இருவரும் இணைந்து ஏற்படுத்துகிறதான (4) பொருளாதார அந்திக்கிறிஸ்து. 
  • அந்த பொருளாதார அந்திக்கிறிஸ்து தான் 666. 
ஏன் 3 அந்திக்கிறிஸ்து?
  • ஏன் சாத்தானுக்கு 3 அந்திக்கிறிஸ்துக்கள் தேவைப்படுகிறது. 
  • ஏனென்றால் அவனிடத்தில் 3 தலைவர்கள் இருக்கிறார்கள். 
  • யேசபேலின் ஆவி, அந்திக்கிறிஸ்துவின் ஆவி, மரண பாதாளத்தின் ஆவி. 
  • அரசியல் ரீதியான அந்திக்கிறிஸ்துவின் மீது உட்புகப் போவது யேசபேலின் ஆவி. 
  • மத ரீதியான அந்திக்கிறஸ்துவின் மீது உட்புகப் போவது அந்திக்கிறிஸ்துவின் ஆவி. 
  • பொருளாதார ரீதியான அந்திக்கிறஸ்துவின் மீது உட்புகப் போவது மரண பாதாளத்தின் ஆவி. 
  • எனவே 666 என்கிற இலக்கத்தை எடுக்காவிட்டால் கொலை செய்யப்படுவார்கள். 
  • ஏனென்றால் பொருளாதாரத்திற்குள்ளே அந்த இலக்கத்தைக் கொண்டு வந்து அது மரண பாதாளத்தின் ஆவி என்பதால், அந்த இலக்கத்தை எடுக்காவிட்டால் நீ கொலை செய்யப்படுவாய் என்பான். 
யேசபேலின் ஆவி:
  • இந்த கடலில் இருந்து எழும்பி வருகிற மிருகத்தின் மேல் யேசபேலின் ஆவி உட்புகப் போகிறது. 
  • யேசபேலின் ஆவியை நாம் அறிந்துக் கொண்டால், இவனைக் குறித்து நாம் நன்றாய் அறிந்து கொள்ள முடியும். 
யேசபேலின் பேரில் இருக்கிற 4 அர்த்தங்கள். 

முதல்:
  • அது ஆகாபின் மனைவி யேசபேல் மாத்திரம் அல்ல, அதற்கு முன்பு இருந்தே அந்த ஆவி இருக்கிறது. 
  • ஏன் 4 அர்த்தங்கள்.
  • ஏனென்றால் யேசபேல் 4 தேசங்களுடன் தொடர்புப்பட்டவள். 
  • ஒன்று 1 இராஜா 16 ல் இருக்கிற சம்பவம்.
  • சீதோன் தேசத்தினுடைய ராஜா ஏத்பால் அவனுடைய மகள் தான் யேசபேல். 
  • அப்போ சீதோன் தேசம்.
  • சீதோன் மொழியிலே யேசபேல் என்றால் என்ன அர்த்தம். 
இரண்டாவது:
  • அவர்கள் வணங்கியது பாகால் என்கிற பிசாசை. 
  • அந்த பாகால் என்பது கானானியருடைய பிசாசு. 
  • அப்படியானால் கானானிய மொழியில் யேசபேல் என்றால் என்ன அர்த்தம். 
மூன்றாவது:
  • ஆகாப் ராஜா யேசபேலை திருமணம் முடித்ததும் அவர்கள் பாகால் பிசாசை மறுபடியும் கொண்டு வந்தது மட்டுமில்லாமல் அஸ்தரோத் என்கிற பாபிலோனியருடைய பிசாசையும் கொண்டு வந்தார்கள். 
  • 1 இரா 16-18 ஐ வாசித்தால் அங்கே யேசபேலுடைய மேஜையிலே பாகாலுடைய தீர்க்கத்தரிசிகள் 400 பேரும், அஸ்தரோத்தினுடைய தீர்க்கத்தரிசிகள் 450 பேரும் சாப்பிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. 
  • அப்படியானால் அந்த பாபிலோனுடைய தேவதையோடு சம்பந்தம் இருக்கிறது. 
  • அப்படியானால் பாபிலோனியருடைய மொழியில் யேசபேல் என்றால் என்ன அர்த்தம்?
நான்காவது:
  • இந்த யேசபேல் கடைசியாக இஸ்ரவேலுக்குள் வந்து இஸ்ரவேலுடைய தீர்க்கத்தரிசிகளை கொலை செய்தாள். 
  • அப்படியானால் எபிரேய மொழியில் யேசபேல் என்றால் என்ன அர்த்தம்?
இந்த 4 அர்த்தத்தையும் நாம் பார்ப்போம். 
முதல் அர்த்தம்:
  • சீதோன் மொழியில் யேசபேல் என்றால் “எங்கே இளவரசன்” என்று அர்த்தம். 
  • ஏத்பால் என்ற இந்த ராஜா அவனுடைய மனைவி கற்பமானாள்.
  • அப்போது அவன் நினைத்தான், எனக்கு பின்பு இந்த தேசத்தை ஆட்சி செய்கிற ஒரு மகன் எனக்கு பிறக்கப் போகிறான். 
  • ஆனால் பிறந்தது பெண் பிள்ளை.
  • எங்கே ராஜகுமாரன்? 
  • சீதோன் மொழியிலே யேசபேலின் அர்த்தமாக அங்கு வைக்கப்பட்டது எங்கே இளவரசன்? என்ற அர்த்தத்துடன். 
  • அந்த அப்பா அந்த பிள்ளையை ஒரு ஆணை போல வளர்த்தான்.
  • அவள் ஆணை விட மோசமான ஆம்பளையாக வளர்ந்தாள்.
  • ஆகாப் திராட்சைத்தோட்டம் தனக்கு கிடைக்கவில்லை என்று அழும் போது யேசபேல் எதற்கு இதற்கு போய் அழுகிறாய் என்று சொல்லி, உனக்கு நல்ல விதத்தில் முடியாவிட்டால் கெட்டவிதத்தில் அதை எடுத்துத் தருகிறேன் என்றாள்.
  • இன்றைக்கும் யேசபேலின் ஆவி சபைக்குள்ளே செயல்படுகிறது. 
  • யேசபேலின் கிரியை நம் வாழ்வில் இருக்கிறதா என்று எப்படி பார்த்துக் கொள்ள முடியும் தெரியுமா?
  • நான் யார் தெரியுமா? நான் இளவரசன் அல்லவா. இந்த பெருமையுடன் பேசுகிற தன்மை தான் யேசபேல்.
  • அப்படிப்பட்ட கண்ணோட்டம் நம் இடத்தில் இருந்தால், யேசபேலுக்கு இடம் கொடுத்து இருக்கிறீர்கள்.  
  • ஆனால் தேவன் சொல்கிறார். பெருமையுள்ளவனுக்கு நான் எதிர்த்து நிற்கிறேன் என்று. 
  • இப்போது இங்கு சொல்லப்படுகிற அரசியல் தலைவன் இப்படிப்பட்டவன். 
  • அரசியல் ரீதியான அந்திக்கிறிஸ்து சொல்லுவான் நான் யார் தெரியுமா? 
இலண்டாவது அர்த்தம்:
  • இரண்டாவது அர்த்தம் “தன்னை உயர்த்திக் கொள்ளாத”. அது தான் கானானின் அர்த்தம். 
  • பொய்யான, மாய்மாலமான தாழ்மை. 
  • அதாவது உள்ளத்தில் உண்மையான நேர்மை இல்லை. 
  • ஆனால் மக்களை கவரக்கூடிய பொய்யான தாழ்மை. 
  • அரசியல் மக்கள் அப்படித் தான் இருப்பார்கள். 
மூன்றாவது அர்த்தம்:
  • மூன்றாவது அர்த்தம் பாபிலோனிய மொழியில் “கணவன் இல்லாத”.
  • கணவன் தான் தலை. மனைவி அவனுக்கு கீழ்ப்படிய வேண்டும்.
  • ஆனால் யேசபேல் தலைமைத்துவத்திற்கு கீழ்ப்படியவில்லை. 
  • இன்று யேசபேலின் ஆவி சபைகளுக்குள் தலைவிரித்து ஆடுகிறது. 
  • சிலர் சபைக்கு கீழ்ப்படுவதில்லை. 
  • தலைமைத்துவம் எனக்கு தேவையில்லை என்பார்கள். 
  • இப்போது ஐரோப்பிய சங்கத் தலைவன் சங்கத்துக்கு கீழ்ப்படிவதில்லை. 
நான்காவது அர்த்தம்: 
  • நான்காவது அர்த்தம், யூத மொழியின் அர்த்தம் “அனுதாபத்தோடு கூடிய அன்பு”.
  • இரண்டையும் கலந்து கொண்ட ஒன்று. 
  • அனுதாபத்தோடு அன்பு வருவதில்லை. 
  • ஆனால் யேசபேல் இப்படியாக ஏமாற்றவில்லை. 
  • இன்றைக்கு அநேகர் காதலிப்பது அனுதாபத்திலே. 
  • அனுதாபத்திலே வருகிற அன்பு சர்ப்பம் கொட்டுவது போல. 
யேசபேல் என்ற பெயரின் 4 அர்த்தங்கள் அட்டவணை:

மொழி

அர்த்தம்

சீதோன் மொழி

எங்கே இளவரசன்

கானானிய மொழி

பொய்யான, மாய்மாலமான தாழ்மை

பாபிலோனிய மொழி

கணவன் இல்லாத

யூத மொழி

அனுதாபத்தோடு கூடிய அன்பு



நான் கண்ட மிருகம் சிறுத்தையைப் போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.
 -வெளிப்படுத்தல் 13 : 2
  • கடைசி 7 வருடங்களில், முதல் மூன்றரை வருடங்கள் சாத்தான் ஆட்சி செய்கிறான்.
  • அந்திக்கிறிஸ்துவாக ஆட்சி செய்வான்.
  • மூன்றரை ஆண்டுகளுக்கு பின்பு அவன் சமுத்திரத்தில் இருந்து ஒரு மிருகத்தை எழும்ப பண்ணுவான். 
  • அந்த சமுத்திரம், மத்தியத்தரைக்கடல். 
  • அந்த 7 வருடங்களில் நடுப்பகுதியிலே ஏற்கனவே இருக்கிற பொம்மை போன்ற ஒரு அதிகாரி, ஐரோப்பிய சங்கத்தின் தலைவரை நீக்கி விட்டு, சாத்தான் தனக்கு வேண்டிய ஆளை அந்த இடத்தில் நியமிப்பான். 
  • உலகத்தில் முதல் முறையாக ஐரோப்பிய சங்கத் தலைவனாக வருவான். அவன் ஆப்பிரிக்கன், ஆசியன், ஐரோப்பியன். 
கிரீடம்:
  • சாதாரணமாக ராஜாக்கள் கிரீடத்தை அணியும் போது அதில் அடையாளத்தைப் பதிப்பார்கள். 
  • அதிலே ராஜாவுடைய குறிக்கோள் இருக்கிறோம். 
  • Queen Elizabeth- defender of faith என்று அவள் கிரீடத்தில் போடப்பட்டிருக்கும். 
  • அப்படியென்றால் விசுவாசத்தை பாதுகாக்கின்றவள். 
  • அது போல சாத்தானின் கிரீடத்திலும் தேவனுடைய வார்த்தைக்கு எதிரான, பிசாசை மகிமைப்படுத்துகிற மாதிரி அதில் எழுதி இருக்கும்.
2 வது வசனம்:
  • சிறுத்தை, கரடி, சிங்கம் என 3 மிருகங்கள் குறிப்பிடப்படுகின்றன.
  • இந்த 3 மிருகங்களின் குணமும், இந்த கடலில் இருந்து ஏறி வருகின்ற மிருகத்தில் இருந்ததாம். 
  • தானியேல் 7 ம் அதிகாரத்தில் தானியேல் ஒரு தரிசனத்தை காண்கிறார். 
  • அந்த தரிசனத்தில் பாபிலோன் இப்போது விழுந்துவிட்டது. 
  • அப்போது மேதியரும், பெர்சியரும் தான் உலகத்தை ஆண்டு கொண்டு இருந்தவர்கள். 
  • அப்பொழுது மேதியரையும், பெர்சியரையும் தோற்கடித்து ஆளுகையை பெறப் போகிறவர்கள் கிரேக்கர்கள். 
  • கி.மு 334 லே, Alexander மூலம் இது நிறைவேறியது.
  • அதன் பிறகு கிரேக்கர்களை தோற்கடித்து ஆளுகையை சொந்தமாக்கி கொண்டவர்கள் ரோமர்கள். 
  • General Pompey என்கிற மனிதன் ரோம தேசத்தை யுத்தம் செய்கிற தேசமாக உருவாக்கினார். 
  • முதல் பேரரசாக Augustus Caesar உருவானார்.
  • இந்த காரியங்கள் நடக்கப்போகிறது என்று தானியேலுக்கு தேவன் தரிசனத்திலே காண்பித்த போது, 
  • அந்த ராஜ்யங்களாய் வரப்போவது இங்கே சொல்லப்பட்டதான சிறுத்தை, கரடி, சிங்கம்  போன்ற இந்த மிருகங்களை அடையாளப்படுத்தி காண்பிக்கிறது. 
  • நீங்கள் உலக சரித்திரத்தை அறிந்தவர்களாக இருந்தால் இந்த 3 பேரரசுகளை குறித்து சொல்லும் போது நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். 
  • மேதியர்கள், பெர்சியர்கள் யார் தெரியுமா?
  • இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரையிலான 127 நாடுகளை பிடித்து ஆட்சி செய்தவர்கள். 
  • இந்தியா பெர்சியர்களுக்கு அடிமைப்பட்டு இருந்தது. 
  • அப்படி வல்லமையுள்ள ஒரு தேசம். 
  • இப்படிப்பட்ட ஒரு தேசமாகிய இந்த தேசத்தை கிரேக்கர்கள் தோற்கடித்தார்கள் என்றால் அது எவ்வளவு இராணுவ பலம் வாய்ந்த தேசமாக இருந்திருக்கும். 
  • கிரேக்கர்கள் தான் உலகத்தில் முதல்முறையாக தங்களுடைய தாய்மொழியை உலக மொழியாக மாற்றினவர்கள். 
  • அப்படிப்பட்ட கிரேக்கர்களை ரோமர்கள் தோற்கடித்தார்கள் என்றால் அது எவ்வளவு பலம் வாய்ந்த தேசமாக இருந்திருக்கும். 
  • அப்படியானால் தானியேல் தன் தரிசனத்தில் கண்ட சிறுத்தை, கரடி, சிங்கம் யார்? 
  • மேதிய பெர்சியர், கிரேக்கர்கள், ரோமர்கள்
  • இங்கே பார்க்கிற அந்த மிருகத்தில் இந்த 3 மிருகங்களின் அடையாளமும் இருக்கின்றனவாம். 
  • அவன் சிறுத்தை-மேதிய பெர்சிய ராஜ்யத்தைப் போல பலம் வாய்ந்தனவாம். 
  • அவன் கரடி-கிரேக்க ராஜ்யத்தைப் போல பலம் வாய்ந்தனவாம். 
  • அவன் சிங்கம்-ரோம ராஜ்யத்தைப் போல பலம் வாய்ந்தனவாம். 
  • முழு உலகத்தின் 3 மகா பெரிய பேரரசின் வல்லமையும் இவனுக்குள் இருக்கிறதாம்.
  • இவன் தான் அரசியல் ரீதியான அந்திக்கிறிஸ்து. 
  • இவனே அந்த கடைசி மூன்றரை ஆண்டுகளை ஆட்சி செய்யப் போகிறவன். 
  • இந்த அரசியல் ரீதியான அந்திக்கிறிஸ்து அப்பா அலெக்செண்டர் ஐ போல, தரியு கோரேஸ்-ஐ போல, Caligula Nero போல, General Pompey, Antiochus Epiphanus ஐ போல, இப்படிப்பட்ட எல்லா துஷ்டத்தனமும் இந்த ஒருவனுக்குள்ளே இருக்கும்.
  • முதல் மூன்றரை ஆண்டுகள் யேசபேல் என்கிற சாத்தான் முழுவதுமாக ஆட்சி செய்கிறது. 
  • முதல் மூன்றரை ஆண்டுகள் முடிகிற போது இந்த ஜரோப்பிய சங்கத் தலைவனுக்கு இந்த சர்ப்பம் முழு அதிகாரத்தையும் கொடுக்கும். 
  • அவன் எப்படிப்பட்டவனாக இருக்கப் போகிறான் என்பதனை தான் இவ்வளவு நேரம் பார்த்தோம். 

அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி,
 -வெளிப்படுத்தல் 13 : 3
  • இவனுடைய தலைகளில் ஒன்று மரித்தது.
  • அது வேறொன்றுமல்ல, ரோமப் பேரரசு. 
  • அந்த ரோமப் பேரரசு முடிந்தது என்று தான் அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். 
  • ரோமப் பேரரசானது ஐரோப்பிய சங்கத்துக்குள் எப்படி மறைந்திருக்கின்றது என்பதனை நாம் பார்த்தோம். 
  • ஆனால் அநேகருக்கு அது தெரியாது. 
  • ரோமப் பேரரசு விழுந்து முடிந்துவிட்டது என்று உலக அரசியல் நினைக்கின்றது. 
  • ஆனால் இன்றும் அது இருக்கிறது. 
  • அந்த மிருகம் மீண்டும் ரோம தேசத்தை பேரரசாக எழுப்பும்.
  • ஐரோப்பிய சங்கத்தினுடைய தலைமைத்துவத்தை அவன் ரோமுக்கு கொண்டு வருவான். 
  • அப்பொழுது தான் மனிதர்கள் ஆச்சர்யப்படுவார்கள். 

அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.
 -வெளிப்படுத்தல் 13 : 4
  • செத்து அழிந்து போனது என்று நினைக்கிற ரோமப் பேரரசை மீண்டும் உயிர்க்கொடுத்து உயிர்ப்பித்த இந்த சர்ப்பத்தை மனிதர்கள் அப்போது வணங்குவார்கள்.
  • நம்மோடு தேவனோடு ஒப்பிடக்கூடிய வகையில் யாருமே இல்லை. 
  • Michael, Migavel, Michelle என்ன அர்த்தம்?
  • தேவனுக்கு சமமானவர் யார்? என்று அர்த்தம்
  • கேள்விக்குள்ளேயே ‘யாருமே இல்லை’ என்கிற பதில் உள்ளது. 
  • ஒரு அழகுள்ள மனிதனுக்கு தான் அந்த பாபிலோனிய நரிகள் மேஷாக் என்று பெயரிட்டது. 
  • மேஷாக் என்பது சந்திரக்கடவுளைப்வபோல என்று அர்த்தம்.
  • அப்படியே அந்த மிருகத்தை பார்த்து உம்மைப் போல யாருமில்லை என்கிறார்கள். 
  • இப்போது ஐரோப்பிய சங்கத்தின் தலைவன் சர்வ வல்லவன், சகல ஞானமுடையவன், சர்வ வியாபகர், அவனுக்கு எதிராக யாரும் வர முடியாது. 
  • நம்முடைய தேவன் ஆதியில் இருந்தே சர்வ வல்லவர், சகல ஞானமுடையவர், சர்வ வியாபகர்.
  • இந்த மிருகம் இவைகளெல்லாம் தனக்கு இருக்கிறது என்று மனிதர்களுக்கு காண்பிப்பான். 
  • விசித்திரமான cc tv camera களை வீடுகளில் பொருத்தி எல்லாருடைய வீட்டிலும் என்ன நடக்கிறது என்பதனை அவன் பார்த்து சொல்லுவான். 
  • ஆகவே மனிதர்கள் அவனுக்கு தெரியாமல் ஒன்றும் செய்ய முடியாது. 
  • அப்பொழுது மக்கள் அவனை சர்வஞானி என நினைப்பார்கள்.
  • தேவனைப் போல மாய்மாலமான தோற்றத்தை அவன் காண்பிப்பான். 

பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டுமாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.
 -வெளிப்படுத்தல் 13 : 5
  • அவன் சொல்லுவான் எனக்கு மறைவாக நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று. 
  • நான் ஒரு கடவுள் என்று சொல்லுவான்.
  • அவன் 42 மாதம் யுத்தம் பண்ணுவான்.
  • அதாவது 12+12+12+6 =42 மாதங்கள்.
  • கடைசி மூன்றரை வருடங்கள்.
  • சர்ப்பம் வேறு, மிருகம் வேறு இன்னொன்று வரப் போகிறது. 

அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது.
 -வெளிப்படுத்தல் 13 : 6
  • மரித்தோ, உயிரோடு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர்களையோ இவன் தூஷிப்பான்.

மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.
 -வெளிப்படுத்தல் 13 : 7
  • இந்த பரிசுத்தவான்கள் என்ற வார்த்தையை குழப்பிக் கொள்ள வேண்டாம். 
  • பரிசுத்தம் என்பதற்கும் சுத்தம்/தூய்மை என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
  • Hagios என்ற வார்த்தை தான் பரிசுத்தம்.
  • வேறு பிரிக்கப்பட்டவர்கள். 
  • கைவிடப்பட்டவர்கள் எப்படியாவது தன்னைக் காத்துக்கொண்டு பரலோகம் போக முயற்சிப்பார்கள்.
  • அவர்களை இவன் கொலை செய்ய முயற்சிப்பான். 

உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.
 -வெளிப்படுத்தல் 13 : 8
  • இந்த அடையாளங்களின் மூலம் சொல்ல வருவது இரட்சிக்கப்படாதவர்களை பற்றி தான். 

காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன்.
 -வெளிப்படுத்தல் 13 : 9
  • காதுள்ளவன் கேட்கக்கடவன்.

சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்.
 -வெளிப்படுத்தல் 13 : 10
  • அந்த கடைசி மூன்றரை ஆண்டுகளுக்குள்ளே அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்கு விரோதமாக எழும்புகிறவர்களை குறித்து மாத்திரமே அந்த 3 வசனங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.
 -வெளிப்படுத்தல் 13 : 11
  • பின்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது
  • கிரேக்க மொழியிலே kai என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. 
  • ‘அதன் பின்பு’ என்று அர்த்தம்
  • முன்பு நடந்த சம்பவங்களின் பின்பு என்று அர்த்தம். 
வெளி 13:1-10 என்ன நடந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 
சர்ப்பம்/சாத்தான் மூன்றரை ஆண்டுகள் அவன் இந்த பூமியை ஆட்சி செய்வான். எந்த மூன்றரை ஆண்டுகள். சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, 7 வருடங்கள் இருக்கிறது இயேசு கிறிஸ்து பகிரங்கமாய் வருவதற்கு. அந்த 7 ஆண்டுகளின் முதல் மூன்றரை ஆண்டுகள் சாத்தான் ஒரு மனிதனுக்குள் பிரவேசித்து இந்த பூமியை ஆட்சி செய்யும். அவன் தான் யேசபேல். அவனுக்கு அந்த முதல் மூன்றரை ஆண்டுகள் முழு உலகத்தையும் ஆட்சி செய்ய சந்தர்ப்பம் கிடைத்தும் (இஸ்ரவேலரைத் தவிர - ஏனென்றால் இஸ்ரவேலை ஆட்சி செய்வது அந்த காலகட்டத்திலே மோசேயும், எலியாவும்). ஆனால் அந்த மூன்றரை ஆண்டுகள் முடிந்த பின்பு சர்ப்பம்/சாத்தானுக்கு மோசேயையும், எலியாவையும் கொலை செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்.மூன்றரை நாட்களுக்கு பிறகு மோசேயும், எலியாவும் மீண்டும் எழுந்து பரலோகத்திற்கு போவார்கள். அதற்கு பிறகு சாத்தான் இஸ்ரவேலரையும் ஆட்சி செய்ய முயற்சிப்பான். ஆயினும் தேவன் இஸ்ரவேலரை ஏதோ ஒரு வனாந்தரத்திற்குள்ளே கொண்டு போவார். அந்த மிகுதியான மூன்றரை ஆண்டுகள் இஸ்ரவேலரை பாதுகாக்கும்படியாய். இப்பொழுது நாம் இருக்கும் படிப்பினை அந்த முதல் மூன்றரை ஆண்டுகள் முடிவடையும் கட்டத்தில். அப்பொழுது அந்த சர்ப்பமானது கடலில் இருந்து ஒரு மிருகத்தை எழும்பி வரப் பண்ணுகிறது. அவன் தான் அரசியல் ரீதியான அந்திக்கிறஸ்து. அவன் தான் ஐரோப்பிய சங்கத்தின் தலைவன். அந்த ஐரோப்பிய தலைவனின் செயல்பாடுகள் என்னவென்று நாம் பார்த்தோம். அதன் பின்பு தான் நாம் இப்பொழுது வாசித்த சம்பவம் வருகிறது. இதுவரையிலே நாம் முதலாவது அந்திகிறிஸ்து - யேசபேல், சாத்தான்,சர்ப்பம்; அவன் தான் முதல் மூன்றரை ஆண்டுகள் அனைத்தையும் செய்வான். அதுவரையிலே 666 இலக்கம் வரவில்லை. இப்பொழுது இரண்டாவது ஒரு மிருகத்தை கடலில் இருந்து எழும்பப் பண்ணுவான். அவன் தான் அரசியல் ரீதியான அந்திக்கிறிஸ்து. 
  • இப்பொழுது 3 வதாக இந்த மிருகம் வருகிறது. 
  • அவன் தான் பூமியில் இருந்து எழும்பி வரக் கண்ட மிருகம்.
  • முதலாவது சர்ப்பம் எப்படி முழு உலகத்தையுமே ஏமாற்றினான்.
  • முதலாவது சர்ப்பம் பொருளாதாரத்தை வைத்து (பாபிலோன் - பொருளாதார ரீதியான அந்திக்கிறிஸ்து) முழு உலகத்தையுமே ஏமாற்றுவான்.
  • இப்பொழுது 2-வதாக கடலில் இருந்து எழும்பி வருபவன் யார்? ஐரோப்பிய சங்கத் தலைவன் - அரசியல் ரீதியான அந்திக்கிறிஸ்து. அதாவது அரசியல் ரீதியான பாபிலோன். 
  • இப்பொழுது 3-வதாக பூமியில் இருந்து எழும்பி வருபவன் தான் மத ரீதியான அந்திக்கிறிஸ்து. (மத ரீதியான பாபிலோன்)
  • இவர்கள் 3 பேரும் இறுதி மூன்றரை ஆண்டுகள் இந்த பூமியை ஆட்சி செய்பவர்கள். 
அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.
  • இவன் தான் மத ரீதியான அந்திக்கிறிஸ்து.
  • இவன் ஆட்டுக்குட்டியைப் போல வருகிறான்
  • ஆடு - மகவும் அப்பாவியான மிருகம்.
  • நம்முடைய கர்த்தராகிய தேவனின் நாமத்தில் ஒன்று தான் ஆட்டுக்குட்டியானவர்.
  • இயேசு எப்படி அப்பாவி போல வந்தாரோ, அது போல வருவான். 
  • இந்த மிருகம் பூமியில் இருந்து வருகிறது. 
  • எங்கே?
  • அதாவது மத்தியத் தரைக்கடல் பகுதியாகிய அதை சார்ந்த பகுதிகளில் இருந்து.
  • ஐரோப்பாவில் இருந்து கூட இருக்கலாம். 
  • அப்படி ஐரோப்பா - ஆக இருந்தால் France, German, England, Switzerland , Austria இந்த தேசங்களில் இருந்து அல்ல.
  • ஏனென்றால் இந்த நேசங்கள் மத்தியத்தரைக்கடலோடு சம்பந்தப்பட்ட இடம் அல்ல.
  • Italy, Greece, Cyprus - ஐரோப்பில் இருந்து வர வேண்டுமென்றால் இந்த 3 தேசங்களில் இருந்து தான் வர வேண்டும். 
  • Greece ல் இருந்து வந்த ஒரு வாலிபர் Great Alexander, முழு உலகத்தையும் கைபற்றியவன். 
  • Africa ல் இருந்து வந்தால் Uganda, Ethiopia, South Africa, Nigeria, Kenya, Gana, இந்த நாடுகளில் இருந்து வர மாட்டான். 
  • ஏனென்றால் இந்த நேசங்கள் மத்தியத்தரைக்கடலோடு சம்பந்தப்பட்ட இடம் அல்ல
  • மத்தியத்தரைக்கடலோடு சம்பந்தப்பட்ட ஆப்பிரிக்க தேசம் எது? Egypt. 
  • அங்கிருந்து கூட வரலாம்.
  • அப்படி இல்லாவிட்டால் ஆசியாவில் இருந்து கூட வரலாம்.
  • ஆசியாவில் இருந்து என்றால் எங்கே இருந்து?
  • India, Pakistan, Japan, China, Korea, Philippines இந்த நாடுகளில் இருந்து வர முடியாது. 
  • மற்ற மத்திய தரைக்கடல் நாடுகளில் இருந்தும் வர முடியாது.
  • ஏனென்றால் இந்த தேசங்கள் மத்தியத்தரைக்கடலோடு சம்பந்தப்பட்ட நாடுகள் அல்ல
  • மத்திய தரைக்கடலோடு தொடர்பு கொண்ட ஆசய நாடுகள் எவை?
  • Israel, Syria, Lebanon, one side of Turkey etc..(துருக்கியின் ஒரு பகுதி ஆசியா, மற்றொரு பகுதி ஐரோப்பா), எகிப்தினுடைய அதிகமான பகுதி ஆப்பிரிக்கா, கொஞ்சம் பகுதி ஆசியா.
  • அப்படியானால் இந்த தேசங்களில் இருந்து வரலாம். 
  • நமக்கு தெரியாது.
  • ஆனால் சொல்லப்பட்ட இந்த குறிப்பிட்ட நாடுகளுக்குள் இருந்து தான் இவன் வருவான். 
  • ஐரோப்பியா, ஆசியாவில் இருக்கிற மத ரீதியான நம்பிக்கைகளை நாம் பார்த்தோமானால் ஒரே மாதிரியான நம்பிக்கைகள் இருக்கிறது. 
  • இந்த 3 கண்டங்களிலும் உள்ள பிசாசுகளை இவன் ஆளுகை செய்கிறவனாக இருக்க வேண்டும்.
  • அன்றைய இஸ்லாமியர், இந்துக்கள், பெளத்தர்கள், கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்களும், Africans, Europeans எல்லோரும், அந்த அந்திக்கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வார்கள்.
  • எல்லா மதத்தினரும் அந்த அந்திக்கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வார்கள். 
  • கிறிஸ்தவத்தில் இருக்கிற Priory of Zion, oppuz died, Illuminati, New world order, New age movement இந்த அனைத்து பிசாசினுடைய சங்கங்களும் இவனை ஏற்றுக் கொள்ள அங்கீகரிக்கும். 
  • இவன் சர்வ மத தலைவனாக எழும்புவான். 
வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.
  • தோற்றத்தில் ஆடு ஆனால் வலுசர்ப்பத்தைப் போல பேசினது. 

அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படிசெய்தது.
 -வெளிப்படுத்தல் 13 : 12
  • இவன் அறிமுகப்படுத்தப் போகிற தேவன் சர்ப்பம். 
  • உலகத்தில் இருக்கும் அனைத்து மத மக்களும் தங்கள் தேவனை காண்பிக்கும்படி இவனிடம் கேட்பார்கள். 
  • இவன் அவர்களுக்கு சர்ப்பத்தை காண்பிக்கப் போகிறான். 
  • இது தான் அல்லா, பிரம்மா, பிதா என்று காண்பிப்பான்.
  • அவர்கள் அவரவரின் மத முறைமையின்படி சர்ப்பத்தை. வணங்குவார்கள். 
முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படிசெய்தது.
  •  அப்படியானால் முதலாவது அந்த சர்ப்பத்தை வணங்க வேண்டுமென்றால் அநேகருக்கு அற்புதங்கள் வேண்டுமல்லவா?

அன்றியும், அது மனுஷருக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து,
 -வெளிப்படுத்தல் 13 : 13
  • பிசாசுக்கு அற்புதங்கள் செய்ய முடியும். 
  • இன்றைக்கு அற்புதங்கள் செய்வது தேவனைப் பார்க்கிலும் சாத்தான். 
  • ஆனால் இயேசு அற்புதம் செய்த ஒவ்வொரு தருணத்திலும், இங்கு என்ன நடந்தது என்று வெளியே போய் சொல்ல வேண்டாம் என்றார். 
  • இன்றைக்கு அற்புதம் நடக்கும் போது அதை video எடுத்து whatsapp, facebook ல் போடுகிறார்கள்.
  • அது இயேசு கிறிஸ்துவின் கண்ணோட்டமாக கண்டிப்பாக இருக்க முடியாது. 
  • உண்மையான அற்புதங்கள் தேவனுக்கு மகிமையை கொண்டு  வரும், மனிதர்களுக்கு அல்ல. 
  • இவனும் எலியாவைப் போல அற்புதங்கள் செய்கிறான். 

மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.
 -வெளிப்படுத்தல் 13 : 14
  • முன்பு மக்கள் கற்களால், மண்ணினால் சிலைகளை செய்து வணங்கினார்கள்.
  • அதேப் போல இன்று Robots செய்கிறார்கள். 
  • அவைகளுக்கு கைகள், கால்கள் எல்லாம் இருக்கிறது. 
  • மனிதர்களை போலவே அது செயல்படுகிறது. 
  • இப்போது மனிதனைப் போல அப்படியே பொம்மை செய்கிறார்கள்.
  • Siri - என்ற voice robot குள் உணர்வுகளை புகுத்த பார்க்கிறார்கள்.

மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.
 -வெளிப்படுத்தல் 13 : 15
  • ஒரு விசித்திரமான, விநோதமான விக்கிரக ஆராதனை. 
  • இந்த மிருகம் இருக்கப் போவது ஐரோப்பாவில் ஓரிடத்திலே. 
  • அந்த மிருகத்தினுடைய சொரூபமாக Robot-ஐ செய்து, முழு உலகத்தாரும் வணங்கும்படி செய்யப் போகிறார்கள்.
  • நாம் நினைக்கிற மாதிரி ஒரு இடத்தில் நிலைத்திருக்கிறதான ஒரு சிலை அல்ல. 
  • ஆனால் இந்த உருவத்திற்கு உயிர் இருக்கிறது. 
  • அதாவது கணினி மயமான உயிர். 
  • அதாவது computer robot உயிர். 
  • அதற்கு உணர்வு உண்டு. 
  • அவனை வணங்காதவர்களை அவனுக்கு தெரியும். 
  • அதிலே sensors போடப்பட்டு இருக்கிறது. 

அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
 -வெளிப்படுத்தல் 13 : 16
  • சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, முதல் மூன்றரை வருடங்களில் இந்த 666 ஐ நாம் காணவில்லை.
  • இது அந்த 7 வருடங்களின் சரியாக நடு பாதியிலே நடக்கிறது. 
  • அப்படியானால் இது நடக்கப் போவது சபை எடுத்துக
  • கொள்ளப்பட்டு மூன்றரை ஆண்டுகளுக்கு பின்பு. 
  • இப்போது Chip கைகளில் போடுவதெல்லாம் 666 அல்ல. 
  • நாம் நம்முடைய வாழ்க்கையில் ஒழுங்காய் இருந்து இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவோமானால் இந்த 666 ஐ குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை. 
  • 1973 ல் வாணிப வியாபார முறைக்கு Bar code system ஐ கொண்டு வந்தார்கள். 
  • இரண்டு கோடுகள் ஒரு இலக்கத்தை நியமப்படுத்துகிற முறைமையை கொண்டு வந்தார்கள்.
  • இப்போது எல்லா பொருட்களிலும் bar code இருக்கிறது.

  • ஏனென்றால் கணினியின் கணித முறைப்படி இலகுவாக பிரித்தாளக்கூடிய இலக்கம் என்றால் 6 என்பது பயன்படுத்தப்படுகிறது. 
  • 1.2,3,6 இவற்றினாலே பிரிக்கக்கூடியதாய் இருந்தால் கணிதமானது மிக இலகுவாக பிரித்துக்கொள்ளக் கூடியதாய் இருக்கும். 
  • 1973 ல் இருந்து bar code முறைமை இருக்கிறது. 
  • Credit card பின்னால் இருப்பதும் bar code தான்.
  • இப்போது இருக்கிற chip அதிலும் bar code இருக்கிறது.
  • இதில் அனைத்திலும் 666 இருக்கிறது. 
  • Steve Jobs - Apple phone கண்டுபிடித்தவர் ஆவிக்குரிய ரீதியில் முட்டாள்.
  • அவன் தன்னுடைய எல்லா கண்டுபிடிப்புகளிலும் ஒரு அடையாளத்தை போட்டான். 
  • ஏவாள் சாப்பிட்டது Apple (தேவன் தடை செய்த பழம்) என்று நினைத்து கொண்டு, ஏவாள் கடித்த Apple பழத்தின் அடையாளத்தை தான் தன்னுடைய எல்லா கண்டுபிடிப்புகளிலும் போட்டான். 
  • இதற்கும் வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள 666 க்கும் சம்பந்தம் இல்லை.

அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங்கூடாதபடிக்கும் செய்தது.
 -வெளிப்படுத்தல் 13 : 17
  • பிசாசுக்கு தேவை 666 ஐ பயன்படுத்த வேண்டும். 
  • அவ்வளவு தான்.
  • நாம் பயன்படுத்துகிற credit cards, phone, website, barcode in grocery எல்லாவற்றிலும் உள்ளது. 
எபிரேய முதல் 6 எழுத்துகள் - 6வது எழுத்து vav.

Monster என்கிற குளிர் பானத்தில் இந்த 3 vav எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கும்


WWW - World Wide Web (vah sound வரும்)




இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக் கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.  
 -வெளிப்படுத்தல் 13 : 18
  • சர்ப்பம் (6)
  • அரசியல் ரீதியான அந்திக்கிறிஸ்து (6)
  • மத ரீதியான அந்திக்கிறிஸ்து (6)
  • கிரேக்க மொழியில் பார்த்தோமானால் மூன்று 6 என்ற இலக்கங்கள்.
  • அது 3 பேருடைய பிரதிநிதித்துவம். 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4