Posts

Showing posts from June, 2023

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 3 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 3 விளக்கம் சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.  -வெளிப்படுத்தல் 3 : 1 ஏழு நட்சத்திரங்களையும்  சூரிய வெளிச்சம் பூமிக்கு வருவதற்கு 8 நிமிடங்கள் தேவைப்படும். நட்சத்திரங்களின் வெளிச்சம் பூமிக்கு வருவதற்கு 8 வருடங்கள் தேவைப்படும். ஏழு நட்சத்திரங்கள் என்பது சபையினுடைய மேய்ப்பர்களை குறிக்கும். இயேசு கிறிஸ்துவானவர் “நீதியின் சூரியன்” என்று மல்கியா 4 வது அதிகாரத்தில் சொல்லப்பட்டு உள்ளது. அது போல மேய்ப்பரானவர்கள் நட்சத்திரங்கள்.  இயேசு கிறிஸ்து அக்கினியை போன்றவர். போதகர்கள் அக்கினியின் ஆவியை கொண்டவர்கள். போதகருக்குள் அக்கினி இருக்க வேண்டும். அது எல்லா இடத்திற்கும் பரவிச் செல்ல வேண்டும்.  எனவே, இயேசு கிறிஸ்துவானவரும், சபையின் போதகரும் சேர்ந்து இந்த சர்தை சபைக்கு பேசுகின்றனர். தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏசாயா 11:1 வசனம் இயேசுவை பற்றி குறிப்பிடுகிறது. அதற்கு அடுத்த வசனம்...