Posts

Showing posts from February, 2021

சங்கீதம் 25 விளக்கவுரை

வழிகாட்டுதலுக்கும் பாதுகாப்பிற்கும் ஆன ஜெபம் தனிப்பட்ட புலம்பல் அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.  - லூக்கா 9 : 62 இந்த சங்கீதம் சரியான பாதையைப் பற்றியது. சரியான பாதை எளிதானது அல்ல என்று அது நமக்கு சொல்கிறது. வாழ்க்கை கடினமாகிவிட்டது என்று தேவனை நம்புவதை நிறுத்த வேண்டாம் என்று சங்கீதம் 25 நமக்குக் கற்பிக்கிறது.  Acrostic Psalm  என்று அழைக்கப்படும் -அகர வரிசையில் (1-22)அமைந்துள்ளது. எபிரேய எழுத்துக்கள் Aleph to Tav வரை 22 எழுத்துக்கள். சங்கீதம் 25: 1 - 7: தேவன் தம்முடைய பாவங்களை நினைவில் கொள்ளமாட்டார் என்றும் தேவன் தனக்கு வழிகாட்டியாக இருப்பார் என்றும் தாவீது ஜெபிக்கிறார். தாவீது தனது எதிரிகளுக்கு எதிராக தேவனிடம் உதவி கேட்கிறார். சங்கீதம் 25: 8 - 14 : தாவீது தேவனைப் பற்றி சொல்கிறார். தேவன் இப்படி இருப்பதால், அவர் தாவீதுக்கு பதிலளிப்பார், அவருக்கு உதவி செய்வார். சங்கீதம் 25:15 - 21 : தாவீது தேவனிடம் தன் எதிரிகள் தன்னைத் துன்புறுத்தியதாகவும் , அவரை சோகமடைய செய்ததாகவும் சொல...